LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ் மொழியை வளர்க்க ரூ. 200 கோடி செலவில் புதிதாக 11 திட்டங்கள்- அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு!

தமிழ் மொழியை வளர்க்க ரூ.200 கோடி செலவில் புதிதாக 11 திட்டங்கள் தொடங்கப்பட உள்ளதாக  தமிழ்மொழி கலாசாரம் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்து உள்ளார்.

வேலூர் மாவட்டம்,  வாணியம்பாடியில் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

மெல்லதமிழ் இனி வெல்லும் என்ற தலைப்பில் தமிழின் பெருமைகள் குறித்து பேசினேன். முத்தமிழ் மன்றத்துடன், தமிழ்ச் சங்கம் இணைந்து இந்த விழாவை தமிழை வளர்க்கும் நோக்குடன் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.

உலகத்தரம் வாய்ந்த தமிழ் அருங்காட்சியகங்கள் அரியலூர் உட்பட தமிழகத்தில் 4 இடங்களில் விரைவில் உருவாக்கப்பட உள்ளன. தமிழர்களை ஒருங்கிணைத்து  மேலும் தமிழை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

மண்ணின் மொழி என்ற பெருமையை யுனெஸ்கோ நிறுவனம் தமிழுக்கு வழங்கியுள்ளதற்காக  பெருமைப் படுகிறேன்.

தமிழ் சொற்குவை என்ற தலைப்பில் தமிழ் குறித்த சந்தேகங்களை போக்கிக் கொள்ளவும் பிற மொழிச் சொற்களை தமிழில் அறிந்து கொள்ளவும் தமிழ் அறிஞர்களைக் கொண்டு கால் சென்டர்கள் அமைக்கபட உள்ளன. 

மேலும் ரூ. 200கோடி மதிப்பில் 11 தமிழ் வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறினார்.

by Mani Bharathi   on 06 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.