|
|||||
தமிழ் மொழியை வளர்க்க ரூ. 200 கோடி செலவில் புதிதாக 11 திட்டங்கள்- அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு! |
|||||
தமிழ் மொழியை வளர்க்க ரூ.200 கோடி செலவில் புதிதாக 11 திட்டங்கள் தொடங்கப்பட உள்ளதாக தமிழ்மொழி கலாசாரம் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்து உள்ளார். வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மெல்லதமிழ் இனி வெல்லும் என்ற தலைப்பில் தமிழின் பெருமைகள் குறித்து பேசினேன். முத்தமிழ் மன்றத்துடன், தமிழ்ச் சங்கம் இணைந்து இந்த விழாவை தமிழை வளர்க்கும் நோக்குடன் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். உலகத்தரம் வாய்ந்த தமிழ் அருங்காட்சியகங்கள் அரியலூர் உட்பட தமிழகத்தில் 4 இடங்களில் விரைவில் உருவாக்கப்பட உள்ளன. தமிழர்களை ஒருங்கிணைத்து மேலும் தமிழை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மண்ணின் மொழி என்ற பெருமையை யுனெஸ்கோ நிறுவனம் தமிழுக்கு வழங்கியுள்ளதற்காக பெருமைப் படுகிறேன். மேலும் ரூ. 200கோடி மதிப்பில் 11 தமிழ் வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறினார். |
|||||
by Mani Bharathi on 06 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|