LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை செய்திகள்

தமிழிசையை இணையம் வழியே கற்கும் அமெரிக்கத் தமிழ் குழந்தைகள் ..

இன்றைய வளர்ந்துவரும் கலாச்சார மாற்றத்தில் இசை பின்புலம் இல்லாத வீட்டுக் குழந்தைகளும் தமிழிசையை கற்க ஆர்வம் காண்பிக்கின்றனர்.   குறிப்பாக வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் இசையில் இன்று இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இதற்கு முறையான அனுபவம்மிக்க இசை ஆசிரியர்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இந்தக் குறையை போக்க குரு.ஆத்மநாதன் அவர்கள் வழிகாட்டுதலில் இணையம் வழியே வீட்டிலிருந்தபடியே தமிழிசை கற்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  பல நாடுகளுக்கு சென்று தமிழிசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திவரும் திருபுவனம் குரு.ஆத்மநாதன்  அவர்கள் கோடையில் வட அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் இசை பயிற்சிப்பட்டறை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவியருக்கு பல மேடை நுணுக்கங்களை, குரல்வளப் பயிற்சிகள் சொல்ல்லிக்கொடுக்கப்பட்டது பெற்றோர்களை மிகவும் கவர்ந்தது. பெற்றோர்கள் இதை தங்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து சொல்லிக்கொடுக்க முடியுமா என்று கோரிக்கைவைத்தனர்.  

இதை ஏற்று இணையம் வழியே (Skype) வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.  இதில் வட அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவ-மாணவிகள், பெரியவர்கள் இசையை ஒரு மணி நேரம் தனிப்பயிற்சியாக கற்றுவருகிறார்கள். இதில் தமிழிசை / கர்நாடக இசை அடிப்படையுடன் சேர்த்து பாரதியார், வள்ளலார்பாரதிதாசன், முத்துத்தாண்டவர், புறநானூறு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை சொல்லிக்கொடுக்கப்படுகிறது.  அமெரிக்காவில் இயங்கும் "நிகழ்கலைக்கழகம்"  என்ற அமைப்பின்   முறைப்படுத்தப்பட்ட மூன்று ஆண்டு இசை பாடத்திட்டத்தை  பின்பற்றி வகுப்புகள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

இதுகுறித்து இதன் தமிழிசை குரு.ஆத்மநாதன் அவர்களுடன்  பேசியபோது  குழந்தைகள் மட்டுல்லாது,   திருமுறை, திருப்புகழ், வள்ளலார், திரையிசை  உள்ளிட்ட பாடல்களை பாட விருப்பமுடைய   பெரியவர்களும் இந்த வகுப்பில் சேர்ந்து பயன்பெறுகிறார்கள் என்றும், புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்த நாட்டில் வசித்தாலும் அந்த நாட்டின் நேரத்திற்கு ஏற்ப ஆசிரியர்களின் நேரம் ஒதுக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.  

மேலும் குறிப்பிடுகையில் அமெரிக்காவில் இயங்கும் தமிழ்ப்பள்ளிகள், தமிழ்ச்சங்கங்கள் தமிழிசை விழாவை, போட்டிகளை, முத்தமிழ் விழாவை நடத்தி ஒவ்வொரு ஆண்டும் இயல்-இசை-நாடகம் என்ற முத்தமிழில் தொய்வடைந்திருக்கும் இசையை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதில் தன் குழந்தையும் பாடி, இசை மேடைகளில் கிடைக்கும் வாய்ப்புகளை கல்வியுடன் சேர்த்து கற்றுத்தேர்ந்து வளரவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் சங்க இலக்கியங்களை இசைவழியே கற்க வாய்ப்பில்லாத சூழலில் தங்கள் குழந்தைகள் இதை கற்றுத்தேர்ந்து பாடுவதை பெருமையாக பார்க்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். 

மூன்று ஆண்டுகளில் முறையாக இசையின் அடிப்படையை கற்று தமிழ்ப் பாடல்களை மேடைகளில் பாட விருப்பமானவர்கள் http://www.valaitamil.com/music/  பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டார். மேலும் முதல் ஒரு மணி நேர வகுப்பு சோதனை வகுப்பு என்றும் அதைத்தொடர்ந்து விருப்பமிருந்தால் தொடரலாம் என்ற வாய்ப்பும் உள்ளதாக தெரிவித்தார்.

 

by Swathi   on 27 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா
தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம் தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம்
பண்ணிசை விழா  -தொடக்க நிகழ்வை வட  அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது. பண்ணிசை விழா -தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது.
திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்
தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு  பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.