LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கல்லூரிகள் விடுமுறை: மாணவர்கள் போராட்டம், இனி அவ்வளவுதானா?

சர்வதேச போர்க்குற்றவாளியாக ராஜபக்சேவை அறிவிக்க வேண்டும்; தமிழகத்தில் இருந்து இலங்கைத் தூதரகத்தை வெளியேற்றவேண்டும்; ஜெனீவா மாநாட்டில் கொண்டுவரப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்; இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமைவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; ஆகிய கோரிக்கைகளோடு தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை லயோலா கல்லூரியின் எட்டு மாணவர்கள் கடந்த 8–ந் தேதியன்று காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கிய பிறகு இந்தப் போராட்டம் வலுவடைய ஆரம்பித்தது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மைகளை ஆங்காங்கே மாணவர்கள் எரித்தனர். பல இடங்களில் ரெயில் மறியல், சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் 27 மாணவர்கள்; புரசைவாக்கம் அரசு சட்டக்கல்லூரி மாணவர் விடுதியில் 20 மாணவர்கள்; அடையாறு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் 11 மாணவர்கள்; செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் 21 மாணவர்கள்; மற்றும் தமிழகமெங்கும் பல கல்லூரிகளிலும் மாணவர்கள் இதேபோல 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் பல மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. வரும் 18–ந் தேதி திங்கள் முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாகவும் பல கல்லூரிகளின் மாணவ–மாணவிகள் அறிவித்து உள்ளனர்.

ஆனால், இந்தப்போராட்ட முயற்சிகளை நீர்த்துப் போகச் செய்ய சென்ற ஆட்சிக் காலத்தில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி என்ன செய்தாரோ, அதையே இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

சென்னை பாரிமுனை அரசு சட்டக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை; அதைத் தொடர்ந்து, அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் நேற்று மாலை திடீரென காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு கல்லூரி கல்வி இயக்குனரகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு; விடுதிகளில் தங்கி இருக்கும் அனைத்து மாணவன், மாணவியர்களும் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியேற உத்தரவு; கல்லூரிகளில் தற்போது நடந்து வருகின்ற மாதிரித் தேர்வுகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு; என தமிழக அரசு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து, போராட்டங்களை முடிக்க முயற்சிக்கிறது.

விடுதி மாணவ–மாணவிகள் நேற்று மாலை 5 மணியளவில் மிகவும் சிரமத்துடன் தங்களுடைய உடைமைகளையும், புத்தகங்களையும் அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு விடுதியை விட்டு வெளியேறினார்கள்.

by MAYIL   on 15 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.