LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள் Print Friendly and PDF

அமெரிக்காவில் விவசாயம் செய்யும் தமிழகப் பொறியாளர்!

அமெரிக்காவில் விவசாயம் செய்யும் தமிழகப் பொறியாளர் குறித்து தகவல்கள் கிடைத்து உள்ளன.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள வளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னராஜ் (வயது 46). இவர் தற்போது  அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் மாகாணத்தில் விவசாயத் துறையில் பொறியாளராக  பணியாற்றி வருகிறார். 

கடந்த 2000ம்  ஆண்டில் முதுகலைப் படிப்பை முடித்து விட்டு,  அமெரிக்கா சென்ற அன்னராஜ் தனது குடும்பத்தினருடன் அங்கு வசித்து வருகிறார். விவசாயத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டதனது வீட்டருகே நிலத்தை குத்தகைக்கு எடுத்து தானே உழவு பணிகளை மேற்கொண்டார். அதில் கீரை வகைகள், முள்ளங்கி, பீன்ஸ், சோயா, தக்காளி, சுரைக்காய் போன்ற அன்றாட வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்கிறார். 

மேலும் அதிகமாக உள்ள காய்கறிகளை அமெரிக்காவில் தனது வீட்டருகே வாழும் தமிழர்களுக்கும் கொடுத்து வருகிறார். இதற்காக தனியாக வாட்ஸ் அப் குரூப் ஒன்றைத் துவங்கி காய்கறிகளை விற்பனை செய்தும் வருகிறார். 

இதுகுறித்து அன்னராஜ் கூறுகையில், "நான் அமெரிக்காவுக்கு சென்று 18 ஆண்டுகள் ஆகின்றன. தமிழகத்தில் கிடைக்கும் பல காய்கறிகள் அங்கு கிடைப்பது இல்லை. இதற்காக விவசாயத்தில் இறங்க முடிவு செய்தேன். வார விடுமுறை நாட்களிலும் காலை, மாலை வேளைகளில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதனால் எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சி கிடைக்கிறது" என்றார்.

by Mani Bharathi   on 21 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கருங்காலி மரத்தின் அற்புத பயன்கள்.. கருங்காலி மரத்தின் அற்புத பயன்கள்..
ஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் ஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்
வேளாண் பகுதி - இயற்கை வேளாண்மை – உரமிடுதலில் ஒருநெருடல்: வேளாண் பகுதி - இயற்கை வேளாண்மை – உரமிடுதலில் ஒருநெருடல்:
பாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும் பாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும்
விவசாய பழமொழிகள்.. விவசாய பழமொழிகள்..
நம்பிக்கை பஞ்சாயத்துகள்  1. திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி நம்பிக்கை பஞ்சாயத்துகள் 1. திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி
வனத்துக்குள் தமிழ்நாடு வனத்துக்குள் தமிழ்நாடு
கொரோனாவிற்கு பின் நாம் செல்லவேண்டிய தற்சார்பு வாழ்வியல் திசை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு.. கொரோனாவிற்கு பின் நாம் செல்லவேண்டிய தற்சார்பு வாழ்வியல் திசை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.