|
|||||
இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்! |
|||||
இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னையில், இந்திய தொழில் கூட்டமைப்பும், தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முதலாவது முதன்மை செயல் அலுவலர் எம்.பி.கோலிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசியதாவது: சென்னையில் பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் ன்பொருள் ஏற்றுமதி 2017-18ம் ஆண்டு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 179 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 38 ஆயிரமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னையிலுள்ள டைடல் பார்க்கில் 90 இருக்கைகள் வசதி கொண்ட தொழில் முனைவோர் மையத்தை அமைத்து உள்ளது. 50 இருக்கைகள் வசதி கொண்ட ஒரு தொழில் முனைவோர் மையம் கோயம்புத்தூரில் நிறுவப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். |
|||||
by Mani Bharathi on 13 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|