கோடை விடுமுறையை அடுத்து பள்ளிகள் ஜூன் 2ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக பள்ளிக்கல்வி இயக்குனராகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறியிருப்பதாவது,
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, ஏப்ரல் 16ம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடக்கின்றன. அதன் பின், நான்கு நாள் விடுமுறைக்கு பின், மீண்டும் பள்ளிகள் இயங்கும். பின், 23ல் இருந்து, ஜூன், 1 ம் தேதி வரை, கோடை விடுமுறை விடப்படுகிறது. பிளஸ் 1 வகுப்பு மட்டும், ஜூன், 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளை பொறுத்தவரை, ஏப்ரல் 30 வரை, பள்ளி வேலை நாட்களாகும். எனவே, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே, 1 முதல், ஜூ ன், 1 வரை விடுமுறை.
|