இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில், தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக தேசிய குற்றத் தடுப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு 1,35,445 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டில் 16,927 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்திற்கு அடுத்த படியாக மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திரா, கர்நாடக போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. தற்கொலைக்கு காரணங்களாக குடும்பப் பிரச்னை, பொருளாதார சூழல், காதல் தோல்வி எனப் பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : tamil.oneindia.in
|