2014ஆம் ஆண்டிற்கான ’பால சாகித்ய அகடமி’ விருது இரா.நடராசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பால சாகித்ய அகடமி விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகடமி விருது. ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான கதைகள் மட்டுமல்லாமல் அதில் அறிவியில், கணிதம், சமூக அக்கறை போல பல்வேறு விஷயங்களை தொட்டுச்செல்பவர். மேலும் கல்வி பற்றிய நிறைய கட்டுரைகள் & புத்தகங்களை எழுதியுள்ளார்.
இரா.நடராசன் கடலூரில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகின்றார்.
இரா.நடராசன் ஐயா அவர்களுக்கு வலைத்தமிழ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
|