LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

தமிழ்நாட்டில் தமிழின் நிலை என்ன?

“மெல்லத் தமிழினிச் சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும் என்றந்தப் பேதையுரைத்தான்”

என்று தனது ஆற்றாமையை அன்றே உரைத்தார் பாரதி.


“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்  செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”
என்று ஆணையிட்டார்.

கலைச் செல்வங்கள் யாவும் வந்தது, தமிழ் வளர்ந்தது.  


“தமிழ்நாட்டின் தமிழ்த் தெருக்களில் தமிழ்தான் இல்லை” என்ற பாவேந்தா¢ன் ஆவேசமும் தீர்ந்தது.  அரசாங்கத்தின் முயற்சியால் கடைவீதிகளில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் மிளிர்கின்றன.  தற்போது பேருந்து நிலையம், சிற்றுந்து, தேநீர், உணவகம், விமான நிலையம், கடைவீதி, பூங்கா, வழித்தடம், மாணவர் விடுதி, காவல் நிலையம் இன்ன பிற தமிழ்ச் சொற்கள் வெளி மாநிலத்தவர்களுக்கும் தொ¢ந்த சொற்களாகி வருகின்றன என்பது உண்மையே.  இப்படி அரசாங்கத்தின் பல முயற்சிகளால், தமிழ்நாட்டில் பல தமிழ்ச் சொற்கள் வழக்கிற்கு வந்து விட்டது.  இன்று தமிழ்த் திரைப்படங்கள் இந்திய அளவில் ஏன் இநதிய அளவில் பேசப்படும் படங்களாகி வருவதும் உண்மையே.  தமிழ்ப் பாடல்கள் மிகுந்த பிரபலமாகி வருவதும் உண்மையே.


இருப்பினும் தமிழ்நாட்டில் தமிழின் நிலை என்ன?  தமிழில் பேசுவது இழிவு என்ற நிலை மாறி, இன்று பல பிரபலங்களும் தமிழில் நேர்காணலில் பங்கு கொண்டு பேசும் அளவிற்கு பேச்சுத் தமிழ் வளர்ந்த அளவிற்கு எழுத்துத் தமிழ் வளர்ந்துள்ளதா?


இது ஒரு கேள்விக்குறியே! இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி என்பது மிகக் குறைந்த விழுக்காடாகவே உள்ளது.  இதை நாம் குறை கூற முடியாது.  உலகம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ஆங்கிலம் உலக மொழியான நிலையில், வாழ்க்கையில் உயர ஆங்கிலம் வேண்டும் என்ற நிலை அனைவர் மனதிலும் வேரூன்றி விட்டது.


இருப்பினும், பள்ளி அளவில் மொழிப்பாடம் எடுக்கும் தமிழ் நாட்டுப் பள்ளிகளில் பயிலும், தமிழ் மக்கள் தன் பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே இந்தி அல்லது நமது நாட்டிற்குச் சிறிதும் சம்பந்தமில்லாத அயல்நாட்டு மொழிகளான, பிரென்சு, ஜெர்மன் போன்ற மொழிப் பாடங்களை எடுத்துப் படிக்க வலியுறுத்துவதும், அதனை மாணவர்கள் விரும்புகின்றார்களோ இல்லையோ அதனைப் படிப்பதை ஒரு பெருமையாக நினைக்கும் நிலை இன்றைய தமிழ் நாட்டின் நாகா¢கமாகி விட்டது. இதில் ஒரு உண்மை என்னவென்றால், இப்படிப் படிக்கும் வேற்று மொழிகளைப் பயின்று முடித்த பின்னர், அம்மொழியில் பேசவோ, அல்லது சுயமாக ஒரு பத்தி எழுதவோ பலருக்கும் முடியாத நிலை என்பது ஒரு அப்பட்டமான உண்மை!.
இந்நிலை வளரக் காரணமென்ன?  ஒரு புறம் பள்ளிகள், மறுபுறம் மக்களின் தவறான வழிகாட்டுதல்கள்; பல பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தங்களுக்குத் தமிழ் வராது என்று சொல்லிக் கொள்வதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.  இப்படிப் பட்ட மனநிலை மாணவர்களுக்கு உருவாகக் காரணம் யார்?


ஆசி¡¢யர்கள் எதைக் கற்றுக் கொடுத்தாலும், அதைக் கற்றுக் கொள்ளும் குழந்தைப் பருவத்தில், மழலைப் பள்ளிகளில் ஏன் மொழிப் பாடங்களை சிறந்த முறையில் கற்றுக் கொடுத்து விருப்பத்தை உண்டாக்கக் கூடாது.  சிறு வயதில் மனதில் விழும் விதைதான் பொ¢ய லட்சியமாக மாறும்.  ஆசி¡¢யர்கள் மாணவர்களின் மனதில் ஒரு புரட்சியை உண்டாக்கலாமே!


அரசாங்கம், தமிழ் மொழியை எடுத்துப் பயிலும் மேல்நிலை மாணவர்களுக்கு மட்டுமே முதல் மதிப்பெண் எடுத்தால் பா¢சு என்று ஊக்குவிக்கும் அதே நேரத்தில்,  பெயர்ப் பலகைகளில் புரட்சியை உண்டாக்கியது போல், பள்ளிகளிலும் பல கூட்டங்கள் நடத்தி, ஆசி¡¢யர்களுக்குத் தமிழ் மொழியின் உயர்வைக் கற்றுத் தர வலியுறுத்தினால் இந்நிலை மாறும்.


இல்லையெனில், நம் மொழியும் பேச்சு மொழியாகப் பிற்காலத்தில் மாறி விடும் வாய்ப்புண்டு!  விழித்தெழுவோம்! நாம் மட்டுமல்ல! அனைவரையும் விழித் தெழச் செய்வோம்!

 

-ஆர்.ராஜராஜன் 

by Swathi   on 24 Mar 2014  0 Comments
Tags: Tamil Language   தமிழ் மொழி                 
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.