LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழக மாணவர்கள் போராட்டம் பற்றி மத்திய அரசு கவலை ஏன்?

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் போர்க்குற்றங்களுக்காக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தின் வரைவு தற்போது உறுப்பு நாடுகளின் பார்வைக்கு சுழற்சியில் விடப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதுடன், முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாட்டில் சட்டக்கல்லூரி மற்றும் கலை–அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆனால் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்தியா இன்னும் முடிவு எடுக்கவில்லை. இது மத்திய அரசுக்கு எதிராக பரவலான எதிர்ப்பு அலைகளை உருவாக்கி வருகிறது. இந்தப் பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் நேற்று அ.தி.மு.க., தி.மு.க., மற்றும் பிற கட்சி எம்.பி.க்கள் பேசினார்கள். சிங்கள அரசால் அங்கு வாழுகிற தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி குறித்து அவர்கள் எடுத்துரைத்தனர். டெல்லி மேல்–சபையிலும் இந்தப் பிரச்சினை கேள்வி நேரத்தின்போது எதிரொலித்தது.

தி.மு.க.திருச்சி சிவா : ‘‘இலங்கையில் மனித உரிமை மீறல் என்பது நெடுங்காலமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் போராட்டத்தால் தமிழகம் பற்றி எரிகிறது. மாணவர்களை அமைதிப்படுத்துகிற வகையில் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு முடிவான வாக்குறுதியை தர வேண்டும். ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் மீதான நிலைப்பாட்டை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்’’.

அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் மைத்ரேயன்: ‘‘ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு முயற்சிகள் நடக்கின்றன. 22–ந்தேதிக்கு பின்னர் மாணவர்கள் போராட்டம் மேலும் தீவிரம் அடையும். எனவே அமெரிக்க தீர்மானம் வலுவுள்ளதாக அமையத் தேவையான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்’’.

பாராளுமன்ற விவகாரங்கள் துறை ராஜாங்க மந்திரி ராஜீவ் சுக்லா:‘‘தமிழ்நாட்டில் நடந்து வருகிற மாணவர்கள் போராட்டம் குறித்து அரசு கவலை கொண்டுள்ளது. சபையின் உணர்வுகளை நான் வெளியுறவுத்துறை மந்திரியிடம் கூறுவேன்’’.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்: இந்தப் பிரச்சினையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது கவலை அளிக்கிறது. தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இலங்கையில் வாழ்கிற தமிழ் இன மக்கள் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்பதை உறுதி செய்வதுதான் அரசின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. இதற்கு என்னென்ன நடவடிக்கைகள் தேவையோ அத்தனையையும் மத்திய அரசு எடுக்கும். இலங்கை அரசை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். நியாயமான பங்களிப்பு செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்டவர்களுடன் நாங்கள் தொடர்பு கொண்டு வருகிறோம்.. இதில் இறுதி முடிவு எடுத்தவுடன் அது பற்றி சபைக்கு தெரிவிக்கப்படும்.(போர்க்குற்றங்கள் தொடர்பாக) பாரபட்சமற்ற, சுதந்திரமான, ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்தப்படவேண்டும். இந்தியா இதில் உறுதியாக உள்ளது.

by MAYIL   on 15 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.