LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- நாமக்கல் கவிஞர் பாடல்கள்

தமிழ் வளர்க்கச் சபதம்

    சீர்திறந்த தமிழர்களின் புத்தாண் டிந்தச்
    சித்திரையில் தொடங்குகிற திறத்தால் இன்று
    பார்புரந்த மனுநீதிச் சோழன் பண்டோர்
    பசுவினுக்கும் சமதர்மம் பரிவாய்ச் செய்தான் ;
    ஏர்சிறந்த ஒருமகனை ஈடாய்த் தந்தான் ;
    இணையறியாப் பெரும்புகழைத் தமிழுக் கீந்தான் ;
    தேர்சிறந்த தியாகேசன் திருவா ரூரில்
    திகழுமிந்தச் சபைதனிலோர் சபதம் செய்வோம்!

    அமிழ்தமென எவ்வுயிர்க்கும் அன்பு செய்தே
    அருள்நெறியைப் புகட்டுவதே அறமாய்க் கொண்ட
    தமிழ்மொழியின் பெருங்குணத்தின் தாரா ளத்தைத்
    தடுக்கவரும் துடுக்குகளைத் தவிர்க்க வேண்டும்.
    நமதருமை முன்னோர்கள் நெடுநா ளாக
    நடத்திவந்த நன்னெறியை நலியப் பேசி
    அமைதிமிக்க தமிழ்வாழ்வைக் குலைக்க எண்ணும்
    அநியாயம் முழுவதையும் அகற்ற வேண்டும்.

    பாண்டியரும் சோழர்களும் சேர மன்னர்
    பாடுபட்டுப் பயிர்செய்த நாக ரீகம்
    நீண்டுயர்ந்து கோபுரங்கள் வடிவாய் நின்று
    நிரந்தரமாம் பரம்பொருளின் நினைவு கூட்டித்
    தூண்டியநல் லுணர்ச்சிகளின் தொகுப்பே யன்றோ
    தொன்றுதொட்டு இன்றளவும் தொடரும் நூல்கள்?
    ஈண்டிவைகள் யாவினையும் இகழ்வோ மானால்
    என்னமிச்சம் தமிழ்வளர்ச்சி இனியும் உண்டோ?

    கோயில்களின் பெரும்பயனைக் குறைத்துப் பேசிக்
    கும்பிடுவோர் நம்புவதைக் குலைத்தும் ஏசித்
    தூயவழி வாழ்வதற்கு நல்லோர் கண்ட
    துறவுமனப் பொறையறிவைத் தோஷம் சொல்லி
    வாயில்வந்த கொச்சைகளால் வசைகள் வீசி
    வகுப்புகளில் வெறுப்புகளே வளரச் செய்யும்
    ஞாயமற்ற பேச்சுகளை நீக்கா விட்டால்
    நம்முடைய தமிழ்வாழ்வு நாச மாகும்.

    முன்னோர்கள் யாவரையும் மூட ரென்றும்
    மூவேந்தர் பரம்பரையும் அமைச்சர் முற்றும்
    சொன்னவர்கள் சூழ்ச்சிகளைச் செய்தா ரன்றிச்
    சொந்தபுத்தி இல்லாத வீணர் என்றும்
    பொன்னாலும் புகழாலும் மயக்க வொண்ணாப்
    புலவர்களின் இலக்கியங்கள் பொய்க ளென்றும்
    என்னேரம் பார்த்தாலும் இகழ்வே யானால்
    எப்படிநம் தமிழ்மொழிக்கு வளர்ச்சி ஏறும்?

    ஏனென்று கேட்பதற்கோ எவரும் இன்றி
    எழில்மிகுந்த தமிழ்வாழ்வை இகழ்ந்து பேசிக்
    கோனென்ற யாவரினும் குணமே மிக்க
    மூவேந்தர் நெறிமுறைக்கும் குற்றம் கூறும்
    நானென்ற அகங்காரம் நம்மைச் சூழ
    நல்லதமிழ் வளர்ச்சியினி நமக்கும் உண்டோ?
    தேனென்ற நமதுமொழி வாழ வேண்டின்
    தீவிரமாய் இந்நிலையைத் தீர்க்க வேண்டும்.

    நித்தியமாம் சத்தியமே நெறியாய்க் கொண்டு
    நெற்றிக்கண் ஈசனுக்கும் குற்றம் காட்டும்
    சுத்தமுள்ள பெரும்புலவர் வழியில் தோன்றிச்
    சுகபோக ஆசைகள்த் துறந்து வாழ்ந்த
    எத்தனையோ பெரியவர்கள் இசைத்த நூல்கள்
    ஏளனத்தால் இழிவடைய விட்டோம் இந்நாள்
    அத்தனையும் அழிந்தொழிய விடுவோ மானால்
    அதன்பிறகு தமிழ்வளர்ச்சி ஆசை என்னாம்?

    புதுமையென்றும் புரட்சியென்றும் புனைந்து கூறிப்
    புவியறிந்த உண்மைகளைப் பொருள்செய் யாமல்
    முதுமொழிகள் யாவையுமே மோசம் செய்யும்
    மூடபக்தி யாகுமென முரண்டு சொல்லிச்
    சதிபுரியத் துணிந்துவிட்டோம்; தமிழ்தாய் நொந்து
    தவிக்கின்றாள்; தான்வளர்த்த தருமம் எல்லாம்
    கதியிழந்து போகுமெனக் கண்ணீர் கொட்டிக்
    கதறுகின்றாள் அவள்பெருமை காப்போம் வாரீர்!

    விஞ்ஞானக் கலைகளெல்லாம் விரித்திட் டாலும்
    வேறெவர்க்கும் அழிவுசெய்ய விரும்பி டாத
    மெய்ஞ்ஞானக் கருணைவழி காக்கும் மேன்மை
    மிகப்படைத்த தமிழ்மனசை மிகவும் தூற்றி
    அஞ்ஞானப் பொய்களையே அடுக்கிக் கொண்டிங்
    கருந்தமிழின் பெருவாழ்வை அழிக்க எண்ணும்
    பொய்ஞ்ஞானத் தீமைகளைப் போக்க வேண்டும்
    புத்தாண்டுச் சபதமிதைப் புனைவோம் இன்று.

    தெள்ளியநல் அறங்களையே தெளிவாய்ச் சொல்லித்
    தினையளவும் பிசகாமல் நடந்து காட்ட
    வள்ளுவனே மறுபடியும் வந்தான் என்ன
    வழிகாட்டித் திருக்குறளை வாழ்ந்த வள்ளல்
    பிள்ளைமனப் பேரறிஞன் பெம்மான் காந்தி
    பெருநெறியே தமிழ்தாயின் பேச்சா மென்று
    கள்ளமற நாமறிந்து கொள்வோ மானால்
    காத்திடலாம் தமிழ்மொழியை; வளர்ச்சி காணும்.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.