LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !!

தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார். 


சென்னை உயர் நீதிமன்றத்தின் மாற்றுமுறை சமரசத் தீர்வு மையக் கட்டடத்தை, எம்.ஆர்.சி. நகரில் அவர் இன்று திறந்து வைத்தார். அப்போது சதாசிவம் கூறியவதாவது, நாடு முழுவதும் நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியிருப்பது கவலை அளிக்கிறது.பெண்கள், தாழ்த்தப்பட்டோர் அடக்குமுறை தொடர்பான வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடிக்க நீதிபதிகள் முயற்சிக்க வேண்டும். பேச்சு சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையில் வழக்குரைஞர்கள் செயல்பட வேண்டும். மேலும் ஏழைகளுக்கும் சட்டத்தின் சேவை கிடைக்கச் செய்ய வேண்டியது வழக்கறிஞர்களின் கடமை.பல நேரங்களில் ஒரு சில வழக்குகளை விசாரிப்பதில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதாகவும், இதனைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  சதாசிவம் தெரிவித்தார். 


சென்னை ஐகோர்ட்டில், வழக்காடும் மொழியாக, தமிழை கொண்டு வரவேண்டும் என்றால், தமிழ் சுருக்கெழுத்தாளர், தமிழில் சட்டநூல்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை முதலில் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே பல கோரிக்கைகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் நீதிபதியாக நான் பதவி வகித்த போது, நீதிபதிகள் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. விரைவில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.  

by Swathi   on 20 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.