LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் விரைவில் “சொற்குவை” திட்டம்!

தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் “சொற்குவைத் திட்டம்” விரைவில் தொடங்கப்படும் என அத்துறையின் அமைச்சர் பாண்டியராஜன் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து உள்ளார். 

இந்த திட்டத்தின் மூலம் தமிழ் சொற்களை அனைத்தையும் தொகுப்பது, சொற்களின் இலக்கண வகைகளை பதிவிடுதல், ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தைகளைப் பதிவு செய்வது, தேடப்படும் தமிழ்ச் சொற்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்பட உள்ளன.

இது தொடர்பான அறிவிப்பை ஏற்கெனவே சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அதற்கான பணிகள் தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளது. விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும். 

இந்தத் திட்டம் அமலுக்கு வந்த பின்னர், இதன்மூலம் இணையம் வழியாக தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் மக்கள் பலன் பெறலாம். தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்காக மட்டும் இன்றி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. 

தமிழ் வளர்ச்சிக்கு என்று தனியாக ஒரு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கு அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் ஊரின் பெயர்கள் தமிழில் மாற்றப்படுவது உள்ளிட்ட சில புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

by Mani Bharathi   on 06 Feb 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
13-Feb-2019 09:48:38 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம்.தமிழ் வளர்ச்க்கென்று ஒரு துறையை உருவாக்கி,:அதன் மூலம் ஊரின் பெயர்களை மாற்றுவது ஒரு நல்ல முயற்சி. இதன் மூலம்ஒரு ஊரின் பாரம்பரிய பெயரை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தமிழக அரசுக்கு நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.