பாலியல் வன்முறைகளில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்ற தேவையான சட்டங்களை இயற்றுங்கள் என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடந்த கடந்த ஏழு மாதங்களாக புனே நகரைச் சேர்ந்த தமிழ் இளைஞர் சிவகுமார் பெருமாள் என்பவர் தினமும் கடிதம் எழுதி வருகிறார்.
நாடு முழுவதும் பாலியல் வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் தண்டனைகள் இல்லாததாலும் கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. புனேயில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றும் பண்டிதர் சிவகுமார் பெருமாள்(37) என்ற தமிழர் பெண்களை பாதுகாக்க வலியுறுத்தி நாட்டின் முதல் குடிமகன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதிய வண்ணமாக உள்ளார். கடந்த ஏப்ரலில் துவங்கிய இவரது 'கடிதப்போர்' இன்னமும் தொடர்கிறது. தன் கடிதத்தில் அன்றாடம் நிகழும் பாலியல் பலாத்கார சம்பவங்களை விவரித்து தடுக்காத காவல்துறை மற்றும் அதிகாரிகளையும் சில சமயங்களில் தடுக்கப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்களையும் விவரிக்கிறார். கடந்த ஏழு மாதங்களாக அவர் தொடர்ந்து தபால் அட்டையில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி வந்த போதிலும் ஒரு நாள் கூட கடித்தத்திற்கான ஒப்புகை ஜனாதிபதி அலுவலகத்திடம் இருந்து அவருக்கு வரவில்லை என்பது வருத்ததிற்குரியது.
|