நமது நாட்டின் முக்கியமான தனியார் வங்கிகளுள் ஒன்றான, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள கிளரிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு : 28.02.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பட்டதாரிகளாக இருந்தால் அதிகபட்சம் 24 வயதுக்கு உட்பட்டும், முது நிலைப் பட்டதாரிகளாக இருந்தால் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு அதிகபட்ச வயதில் 5 ஆண்டுகள் சலுகை உள்ளது.
கல்வித் தகுதி : குறைந்த பட்சம் பட்டப் படிப்பு தேவைப்படுகிறது. இன்ஜினியரிங் பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தால் குறைந்த பட்சம் 60 மதிப்பெண்களுடனும், இதர பிரிவினராக இருந்தால் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடனும் பட்டப் படிப்பை முழு நேரப் படிப்பாக முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் ஆபரேஷன்ஸ் பிரிவிலும் தகுதி தேவைப்படும்.
தேர்ச்சி முறை : ஆன்-லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.300/-க்கான டி.டி.,யை Tamilnad Mercantile Bank Ltd என்ற பெயரில் தூத்துக்குடி அல்லது திருநெல்வேலியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். முதலில் இந்த வங்கியின் இணையதளத்திற்கு சென்று முழுமையான விபரங்களை அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2015
கூடுதல் விவரங்களுக்கு http://career.tmb.in/jobinfo.htm?job_num=CO1501 என்ற இணைய முகவரியை பார்க்கவும்.
|