திருச்சி, ஆகஸ்ட் 20:
முன்னாள் பிரதமர் ராஜீவ் 69வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் ஏழை குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானவில் உள்ள ராஜீவ் சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஐ.என்.டி.யூ.சி., மாநில துணைத்தலைவர் கல்யாணராமன், கவுன்சிலர் ஹேமா, தொகுதி தலைவர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.* ஸ்ரீரங்கம் காங்கிரஸ் சார்பில், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் மூப்பணார் 82வது பிறந்தநாளை முன்னிட்டும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் 69வது பிறந்தாநளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் தெற்குவாசல் கடைவீதி, வ.உ.சி., தெரு சந்திப்பில் தலைவர்கள் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஐ.என்.டி.யூ.சி., (டி.சி.டி.யூ.,) மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன், கோட்ட தலைவர் கதிரேசன், முன்னாளர் கவுன்சிலர் கிருஷ்ணவேணி உள்பட பலர் பங்கேற்றனர்.
|