நெய்வேலி : நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக 300 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என்.எல்.சி தலைவர் சுரேந்தர் மோகன் கூறியுள்ளார். என்.எல்.சி தலைவர் சுரேந்தர் மோகன் நெய்வேலியில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், இரண்டாம் மின் நிலைய விரிவாக்கத்தின் முதல் பகுதி அக்டோபரில் செயல்பட துவங்கியதும் அதில் உற்பத்தியாகும் 250 மெகாவாட்டிலிருந்து 150 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் கட்ட பகுதி செயல்பட துவங்கியதும் அதிலிருந்தும் தமிழகத்துக்கு 150 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படும். இதன்மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
|