சென்னை : இதுவரையில் இல்லாத அளவுக்கு காற்றாலையின் மூலம் பெறப்பட்ட மின் உற்பத்தியில் திடீரென சரிவு ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் 8 முதல் 12 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டு தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மின்பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. தமிழகத்தின் மொத்த மின் தேவை 11,283 மெகாவாட். தற்போது தமிழகத்தில் நீர்மின், அனல்மின், காற்றாலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மூலம் 10,364.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ஏற்ற வசதி உள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணை அனைத்தும் நிரம்பி விடும். அதேபோல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணை நிரம்பி, காவிரியாற்றில் தண்ணீர் விடும்போது மேட்டூர் அணையில் இருந்து ஈரோடு வரை கட்டளை மின் திட்டங்களில் நீர் மின் உற்பத்தி தடையின்றி நடக்கும். அனால் தற்போது பருவ மழையும் பொய்த்துள்ளதால் நீர் மின் நிலையங்களின் மூலம் கிடைக்கும் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
|