சென்னை : தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை அதிகாரிகளுக்கு, இந்திய அரசு பயிற்சி அளித்து வருவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயலலிதா ஏற்கனவே பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி, இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனடியாக வெளியேற்றும்படி வற்புறுத்தி இருந்தார். ஆனால்,நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு,இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி நீடிக்கும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மீண்டும் கண்டன கடிதம் எழுதி, இலங்கை ராணுவ அதிகாரிகளை வெளியேற்றும்படி வற்புறுத்தி உள்ளார்.
சென்னை : தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை அதிகாரிகளுக்கு, இந்திய அரசு பயிற்சி அளித்து வருவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயலலிதா ஏற்கனவே பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி, இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனடியாக வெளியேற்றும்படி வற்புறுத்தி இருந்தார். ஆனால்,நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு,இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி நீடிக்கும் என்று அறிவித்தார்.இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மீண்டும் கண்டன கடிதம் எழுதி, இலங்கை ராணுவ அதிகாரிகளை வெளியேற்றும்படி வற்புறுத்தி உள்ளார்.
|