LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மீண்டும் மின்வெட்டு தலைதூக்கும் அபாயம் - மின் வாரியம்

 

நெல்லை : தமிழகத்தில் அடிக்கடி காற்றாலை மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதம் மின் வெட்டு மீண்டும் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 230 கோடி யூனிட் முதல் 250 கோடி யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சுமார் 3,500 முதல் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பற்றாக்குறையாக உள்ளது. காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் உதவியுடன் பிரச்னை ஓரளவு சமாளிக்கப்பட்டு வருகிறது. திடீரென காற்றின் வேகம் குறையும் போது மின் இருப்பு குறைந்து உடனடி மின் வெட்டை அமல் படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் நெல்லை, ஈரோடு மண்டலங்களில் கடந்த 26 ஆம் தேதி 2,375 மெ.வா மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைத்தது. ஆனால் நேற்று காலை நிலவரப்படி 1880 மெ.வா ஆக காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது. தென்மேற்கு பருவமழை பெய்யாததால் நீர் தேக்கங்களில் உற்பத்தியாகும் மின்சாரமும் கிடைக்கவில்லை. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்து வாங்க கூட பணம் இல்லை என்று மின்சார வாரியம் கூறி வருகிறது. எனவே காற்றாலைகளை மட்டுமே நம்பி இருக்காமல் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின் உற்பத்தி மற்றும் தமிழகத்தில் நிலுவையில் உள்ள புதிய மின்திட்டங்களை விரைவுபடுத்தி உற்பத்தியை அதிகரித்தால் மட்டுமே சீரான மின் விநியோகத்துக்கு வாய்ப்பு உள்ளது.
மின்கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய பின்னரும் நிதி நெருக்கடியில் திணறும் மின் வாரியத்தால் வெளி மாநிலங்களில் இருந்து காசுக்கு மின்சாரம் கொள்முதல் செய்யமுடியாமல் சிக்கி தவிக்கிறது. நிமிடத்திற்கு நிமிடம் காற்றின் வேகம் மாறுபடுவதால் காற்றாலைகள் சீராக இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு பருவ காற்று ஆகஸ்ட் இறுதிக்கு பிறகு நீடிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செப்டம்பர் மாதத் தில் மீண்டும் கடுமையான மின்வெட்டை மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மின் வாரியத்தினர் கவலையடைந்துள்ளனர்.

 

நெல்லை : தமிழகத்தில் அடிக்கடி காற்றாலை மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதம் மின் வெட்டு மீண்டும் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 230 கோடி யூனிட் முதல் 250 கோடி யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சுமார் 3,500 முதல் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பற்றாக்குறையாக உள்ளது. காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் உதவியுடன் பிரச்னை ஓரளவு சமாளிக்கப்பட்டு வருகிறது. திடீரென காற்றின் வேகம் குறையும் போது மின் இருப்பு குறைந்து உடனடி மின் வெட்டை அமல் படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

 

இந்நிலையில் நெல்லை, ஈரோடு மண்டலங்களில் கடந்த 26 ஆம் தேதி 2,375 மெ.வா மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைத்தது. ஆனால் நேற்று காலை நிலவரப்படி 1880 மெ.வா ஆக காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது. தென்மேற்கு பருவமழை பெய்யாததால் நீர் தேக்கங்களில் உற்பத்தியாகும் மின்சாரமும் கிடைக்கவில்லை. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்து வாங்க கூட பணம் இல்லை என்று மின்சார வாரியம் கூறி வருகிறது. எனவே காற்றாலைகளை மட்டுமே நம்பி இருக்காமல் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின் உற்பத்தி மற்றும் தமிழகத்தில் நிலுவையில் உள்ள புதிய மின்திட்டங்களை விரைவுபடுத்தி உற்பத்தியை அதிகரித்தால் மட்டுமே சீரான மின் விநியோகத்துக்கு வாய்ப்பு உள்ளது.

 

by Swathi   on 28 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.