|
|||||
மீண்டும் மின்வெட்டு தலைதூக்கும் அபாயம் - மின் வாரியம் |
|||||
நெல்லை : தமிழகத்தில் அடிக்கடி காற்றாலை மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதம் மின் வெட்டு மீண்டும் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 230 கோடி யூனிட் முதல் 250 கோடி யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சுமார் 3,500 முதல் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பற்றாக்குறையாக உள்ளது. காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் உதவியுடன் பிரச்னை ஓரளவு சமாளிக்கப்பட்டு வருகிறது. திடீரென காற்றின் வேகம் குறையும் போது மின் இருப்பு குறைந்து உடனடி மின் வெட்டை அமல் படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் நெல்லை, ஈரோடு மண்டலங்களில் கடந்த 26 ஆம் தேதி 2,375 மெ.வா மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைத்தது. ஆனால் நேற்று காலை நிலவரப்படி 1880 மெ.வா ஆக காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது. தென்மேற்கு பருவமழை பெய்யாததால் நீர் தேக்கங்களில் உற்பத்தியாகும் மின்சாரமும் கிடைக்கவில்லை. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்து வாங்க கூட பணம் இல்லை என்று மின்சார வாரியம் கூறி வருகிறது. எனவே காற்றாலைகளை மட்டுமே நம்பி இருக்காமல் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின் உற்பத்தி மற்றும் தமிழகத்தில் நிலுவையில் உள்ள புதிய மின்திட்டங்களை விரைவுபடுத்தி உற்பத்தியை அதிகரித்தால் மட்டுமே சீரான மின் விநியோகத்துக்கு வாய்ப்பு உள்ளது.
மின்கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய பின்னரும் நிதி நெருக்கடியில் திணறும் மின் வாரியத்தால் வெளி மாநிலங்களில் இருந்து காசுக்கு மின்சாரம் கொள்முதல் செய்யமுடியாமல் சிக்கி தவிக்கிறது. நிமிடத்திற்கு நிமிடம் காற்றின் வேகம் மாறுபடுவதால் காற்றாலைகள் சீராக இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு பருவ காற்று ஆகஸ்ட் இறுதிக்கு பிறகு நீடிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செப்டம்பர் மாதத் தில் மீண்டும் கடுமையான மின்வெட்டை மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மின் வாரியத்தினர் கவலையடைந்துள்ளனர்.
நெல்லை : தமிழகத்தில் அடிக்கடி காற்றாலை மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதம் மின் வெட்டு மீண்டும் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 230 கோடி யூனிட் முதல் 250 கோடி யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சுமார் 3,500 முதல் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பற்றாக்குறையாக உள்ளது. காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் உதவியுடன் பிரச்னை ஓரளவு சமாளிக்கப்பட்டு வருகிறது. திடீரென காற்றின் வேகம் குறையும் போது மின் இருப்பு குறைந்து உடனடி மின் வெட்டை அமல் படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் நெல்லை, ஈரோடு மண்டலங்களில் கடந்த 26 ஆம் தேதி 2,375 மெ.வா மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைத்தது. ஆனால் நேற்று காலை நிலவரப்படி 1880 மெ.வா ஆக காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது. தென்மேற்கு பருவமழை பெய்யாததால் நீர் தேக்கங்களில் உற்பத்தியாகும் மின்சாரமும் கிடைக்கவில்லை. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்து வாங்க கூட பணம் இல்லை என்று மின்சார வாரியம் கூறி வருகிறது. எனவே காற்றாலைகளை மட்டுமே நம்பி இருக்காமல் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின் உற்பத்தி மற்றும் தமிழகத்தில் நிலுவையில் உள்ள புதிய மின்திட்டங்களை விரைவுபடுத்தி உற்பத்தியை அதிகரித்தால் மட்டுமே சீரான மின் விநியோகத்துக்கு வாய்ப்பு உள்ளது.
|
|||||
by Swathi on 28 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|