திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற்ற ஆடி கிருத்திகை விழாவில் பங்கேற்ற மக்கள் முருகனை சிறப்பாக வழிபட்டனர். பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.இன்று அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த முருகப் பெருமானுக்கு தங்க கவசம், பச்சை மரகத கல் அணிவிக்கப்பட்டிருந்தது.மாலை 6 மணிக்கு சரவண பொய்கை குளத்தில் தெப்பத் திருவிழா நடக்கிறது.
|