சென்னை, ஆக. 6:
கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஜெயலலிதா. இவர் ஜூன் 21-ம் தேதி கொடநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் சில வாரங்கள் தங்கி இருந்து அரசுப் பணிகளை மேற்கொள்வார் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.இடையே, குடியரசு தலைவர் தேர்தலுக்காக ஜூலை 18-ல் சென்னை திரும்பினார். அன்று முதல்வரை, குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சங்மா சந்தித்துப் பேசினார். ஜூலை 19-ல் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களித்த முதல்வர் அன்று பிற்பகலே புறப்பட்டு மீண்டும் கொடநாடு சென்றார்.இதைத் தொடர்ந்து கொடநாட்டிலிருந்து திங்கள்கிழமை ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.
|