|
|||||
வேலைவாய்ப்பக ஊழியர்கள் கூண்டோடு மாற்றம்-அமைச்சர் |
|||||
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் செவ்வாய்க்கிழமை திடீர்
ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஜெயா நகரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது.
அலுவலகத்தில் வேலைவாய்ப்பு பதிவை முறையாக செய்வதில்லை, ஆன்லைன் மூலம் பதிவு செய்வதில்லை, விண்ணப்பங்களை இலவசமாக
தருவதில்லை என பல்வேறு புகார்கள் எழுந்தன.இது குறித்து எந்தவித முன்னறிவிப்பின்றி அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலக
பதிவேடுகளை ஆய்வு செய்த அமைச்சர் செல்லபாண்டியன், அங்கிருந்தே தொலைபேசி மூலம் வேலைவாய்ப்புத்துறை செயலருக்கு அனைத்து
ஊழியர்களையும் இடமாறுதல் செய்யுங்கள் என உத்தரவிட்டார்.பிறகு அவர் இங்குள்ள அலுவலகத்துக்கு முதல்வரிடம் அனுமதி பெற்று சொந்தக்
கட்டடம் கட்டப்படும். அலுவலகமே ஊழல் மயமாகி உள்ளது. அனைத்து ஊழியர்களையும் இடம் மாறுதல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
அலுவலகத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.
திருவள்ளூர், ஜூலை 31: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஜெயா நகரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. அலுவலகத்தில் வேலைவாய்ப்பு பதிவை முறையாக செய்வதில்லை, ஆன்லைன் மூலம் பதிவு செய்வதில்லை, விண்ணப்பங்களை இலவசமாக தருவதில்லை என பல்வேறு புகார்கள் எழுந்தன.இது குறித்து எந்தவித முன்னறிவிப்பின்றி அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலக பதிவேடுகளை ஆய்வு செய்த அமைச்சர் செல்லபாண்டியன், அங்கிருந்தே தொலைபேசி மூலம் வேலைவாய்ப்புத்துறை செயலருக்கு அனைத்து ஊழியர்களையும் இடமாறுதல் செய்யுங்கள் என உத்தரவிட்டார். பிறகு அவர் இங்குள்ள அலுவலகத்துக்கு முதல்வரிடம் அனுமதி பெற்று சொந்தக் கட்டடம் கட்டப்படும். அலுவலகமே ஊழல் மயமாகி உள்ளது. அனைத்து ஊழியர்களையும் இடம் மாறுதல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். அலுவலகத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். |
|||||
by Swathi on 01 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|