சென்னை : கண்காணிப்பிற்கு இடையே மீண்டும் திறக்கப்பட்ட, "பேஸ்புக்" கணக்கில் பதிவுகளை கொடுப்பதை கருணாநிதி நிறுத்தியுள்ளார். தற்போது அவரது அறிக்கைகள், "ட்விட்டரில்" மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வாரத்தில் துவங்கப்பட்ட கருணாநிதியின் "பேஸ்புக்' கணக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதன் காரணமாக ஒரே நாளில் மூடப்பட்டது. பின்னர், கடும் கண்காணிப்பிற்கு இடையே மறுநாள் அதாவது 18 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. கருணாநிதியை கேள்வி கேட்டு பதிவிட்ட அனைவருமே கருத்துகள் பதிவதில் இருந்து தடை செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த நான்கு தினங்களாக கருணாநிதி, "டிவிட்ட'ரில் மட்டுமே பதிந்து வருகிறார்.
|