|
|||||
தமிழகத்தில் கனிம மணல் அள்ள தடை !!! |
|||||
தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை விதிப்பதாக, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கடலோர பகுதிகளில், கனிம மணல் குறிப்பிட்ட அளவை விட அதிகமா அல்லப்படுவதாக, அரசுக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தது, இதனை அடுத்து, நெல்லை , தூத்துக்குடி மாவட்டங்களி்ல் கனிம மணல் அள்ளப்பட்டு வந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய, ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி, தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது ஆய்வு அறிக்கையை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இன்று அளித்துள்ளது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
ஒரு நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், அரசாங்கத்திற்கு வருவாயை ஈட்டித் தருவதிலும் கனிமங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கனிமங்களை அரசின் முறையான அனுமதியின்றியோ அல்லது அரசு அனுமதித்த அளவுக்கு மேல் வரம்பு மீறியோ சுரங்க நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது. தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக ‘கடற்கரை கனிமங்கள்’, அதாவது "Beach Minerals"எனப்படும் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்றவை எடுக்கப்படுவதாக அறிக்கைகள் பெறப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் கனிமக் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வருவாய்த் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையின் கீழ், வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள முதல்வர், சிறப்புக் குழு மற்றும் உப குழுக்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் கடற்கரை கனிமங்களான கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் ஆகியவற்றை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள குத்தகைதாரர்களால் பெருங்கனிமக் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பதைக் கண்டறியும் வகையில், தமிழ்நாட்டில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள எஞ்சிய 71 பெருங்கனிம குவாரிகளை இந்தச் சிறப்புக் குழு ஆய்வு செய்து உண்மை நிலையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தான் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். |
|||||
by Swathi on 17 Sep 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|