மரக்காணம் கலவரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் நேற்று வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் மூன்று அரசு பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் நூற்றுக்கு மேற்பட்ட அரசு பேருந்துகள் தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் நேற்று இரவு சென்னையிலிருந்து வட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பொது மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.
|