கிறிஸ்தவர்கள் புனித பயணம் மேற்கொள்ள இருபதாயிரம் ருபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என தமிழக சிறுபான்மை நலத்துறை அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக சிறுபான்மை நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,இஸ்லாமிய மக்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு அரசு உதவி செய்வதை போன்று கிறித்துவ மக்களின் ஜெருசலேம் புனித யாத்திரைக்கும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்றுவர நபர் ஒருவருக்கு ரூ.20,000 வீதம் ஆண்டொன்றிற்கு 500 கிறித்தவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.இந்த புனித பயணத்திற்கான விணப்பங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம் என அத செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Christians wishing to go on a pilgrimage to Jerusalem can avail of the special financial assistance of Rs. 20,000 by Tamilnadu Government.In the first phase, 500 Christians belonging to all denominations would get the assistance Applications could be District Collector's offices operating Backward and Minorities Welfare offices can be obtained or downloaded from the government websites. |