நடப்பு ஆண்டில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக, தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்துக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக சட்ட பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார். அதன் படி ஒரு வீட்டுக்கு நிதியானது ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.2.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி உயர்வுக்கு பசுமை வீடு திட்ட பயனாளிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
|