தமிழகத்தில் முதல் முறையாக உணவகம் மற்றும் கழிப்பிட வசதிகளுடன் கூடிய இரண்டு பேருந்துகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிமுகம் செய்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் நவீன பேருந்துகள் உள்பட மொத்தம் 244 பேருந்துகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. உணவகம் மற்றும் கழிப்பிட வசதிகளுடன் கூடிய பேருந்துகள் ஸ்ரீரங்கம் - சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன. இந்தவகை பேருந்துகளில் காலையில் இட்லி, பொங்கல், ஊத்தாப்பமும், மதியம் லெமன் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதமும் சலுகை விலையில் வழங்கப்படுகின்றன. இது தவிர மிக்சர், பிஸ்கெட் பாக்கெட் மற்றும் டீ ஆகியவை அனைத்து நேரங்களிலும் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
|