தஞ்சை, திருவாரூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில், மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலக்கரி படுகை மீத்தேன் எரிவாயு திட்டத்தால், அந்த பகுதி விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என ஆய்வு செய்ய, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம், ஆகியவற்றை சேர்ந்த நிபுணர்கள், பொதுப்பணித்துறை, வேளாண்மைத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், ஆகியவற்றை சேர்ந்த அலுவலர் கொண்ட குழு அமைத்துள்ளது.இந்த குழு அறிக்கை அளித்து, அதன் அடிப்படையில், அரசு ஒரு முடிவு எடுக்கும் வரை, மத்திய அரசு அனுமதிபெற்றுள்ள நிறுவனம், எந்தப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது,'' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது பணிகளை நிறுத்தி வைத்துள்ளது.
|