ஒன்பது வழக்குகளில் சிக்கியுள்ள கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி மீது குண்டர் சட்டம் பாய வாய்ப்புள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற பல ஆயிரம் கோடி கிரானைட் முறைகேடு தொடர்பாக கிரானைட் அதிபர்கள் பி.ஆர்.பழனிச்சாமி, பன்னீர் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 15 கிரானைட் அதிபர்கள் தலைமறைவாக இருந்து வருகிறார்கள். அவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கிரானைட் குவாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை அதிகாரிகள் குழு தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகிறது. இன்னும் 2 வாரங்கள் இந்த பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
|