நாமக்கல் : குரூப் 2 வினாத்தாள், நாமக்கல்லில் உள்ள, "தாஜ் இன்டர்நெட்' சென்டரில் டவுன் லோடு செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. ஆனால், யார் அனுப்பியது, எங்கிருந்து அனுப்பப்பட்டது போன்ற விபரங்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாததால், "சைபர் க்ரைம்' உதவியை நாட, போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும், கடந்த 12ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு நடந்தது. தேர்வு வினாத்தாள், தேர்வுக்கு முன்னரே வெளியானது.
|