|
|||||
3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தாழிகள் கண்டுபிடிப்பு - ஏரல், தூத்துக்குடி மாவட்டம் |
|||||
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம், முன்நாளில் அதாவது பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கி வந்தது. இங்கு இருந்து பல்வேறு நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கொற்கையில் தற்போது அரிய வரலாற்றை பறைசாற்றும் சுவடுகள் அதிக அளவில் இல்லாமல் உள்ளது. ஆனாலும் தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கொற்கை கிராமத்தில் தற்போது கண்ணகி கோவில் அருகே மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அருகில் உள்ள குளத்தை தோண்டும் போது, மண்ணுக்குள் அரிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முதுமக்கள் தாழிகள் அனைத்து உடைக்கப்பட்டு இருப்பது சற்று வருத்தமளிக்கும் செய்தி. அதே நேரத்தில் இந்த முதுமக்கள் தாழிகள் அனைத்தும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் மணல் படிவங்களும் தெளிவாக கிடைத்து உள்ளன. இதனை ஆராய்ச்சி செய்தால் பண்டைய தமிழர்கள் குறித்த தெளிவான விவரங்களை அறிய வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம், முன்நாளில் அதாவது பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கி வந்தது. இங்கு இருந்து பல்வேறு நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கொற்கையில் தற்போது அரிய வரலாற்றை பறைசாற்றும் சுவடுகள் அதிக அளவில் இல்லாமல் உள்ளது. ஆனாலும் தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கொற்கை கிராமத்தில் தற்போது கண்ணகி கோவில் அருகே மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அருகில் உள்ள குளத்தை தோண்டும் போது, மண்ணுக்குள் அரிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முதுமக்கள் தாழிகள் அனைத்து உடைக்கப்பட்டு இருப்பது சற்று வருத்தமளிக்கும் செய்தி. அதே நேரத்தில் இந்த முதுமக்கள் தாழிகள் அனைத்தும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் மணல் படிவங்களும் தெளிவாக கிடைத்து உள்ளன. இதனை ஆராய்ச்சி செய்தால் பண்டைய தமிழர்கள் குறித்த தெளிவான விவரங்களை அறிய வாய்ப்பு உள்ளது.
|
|||||
by Swathi on 23 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|