சென்னை: நாளை சுதந்திர தினம் என்பதால் சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி வாகன சோதனை, லாட்ஜ்களில் சோதனை நடந்து வருகிறது. வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் 24 மணிநேரமும் வாகனங்களில் ரோந்து செல்கின்றனர். ரயில்களில் பார்சல் அனுப்ப தடை செய்யப்பட்டுள்ளது.
|