நாகப்பட்டினம், வேளாங்கன்னி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா நேற்று மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் திருக்கொடியை புனிதம் செய்து வைத்தார். புனிதம் செய்யப்பட்ட கொடி வேளாங்கண்ணி கடைத் தெரு, ஆரிய நாட்டு தெரு, கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட பின்னர் கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்டது.
|