|
|||||
ரம்ஜான் - இஸ்லாமிய மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து |
|||||
சென்னை - இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தலைவர்களின் வாழ்த்து செய்திகள்,
முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து :
ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி தாமும் உண்டு, உள்ளம் மகிழும் இனிய திருநாள் ரம்ஜான் திருநாள், முப்பது நாட்கள் பகலில் பருகாமலும் உணவு உட்கொள்ளமலும் நோன்பு இருந்து, தீய எண்ணங்கள் அனைத்தையும் அழித்து, இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்றார்.
திமுக தலைவர் கருணாநிதி :
அண்ணல் நபிகள் நாயகம் வழங்கிய போதனையின் படி இஸ்லாம் சமுதாய மக்கள் ஒரு மாத காலம், பகல் பொழுது முழுவதும் நீர் கூட அருந்தாமல் கடுமையாக நோன்பிருந்து இரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் கொண்டாடுகின்றனர். இஸ்லாம் சமுதாயத்திற்கு மட்டுமின்றி மனித சமுதாயம் அனைத்திற்கும் பொருந்தும் வாழ்க்கை நெறியை அண்ணல் நபிகள் போதித்துள்ளார் என்று அவர் கூறினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் :
இசுலாமியர்களுக்கு ரமலான் மாதம் மிகவும் புனிதமானது. இந்த மாதத்தில் தான் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பினை மேற்கொள்கின்றனர். பசிப்பிணியின் தன்மை பற்றி அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்நோன்பு அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
சென்னை - இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தலைவர்களின் வாழ்த்து செய்திகள்,
முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து : ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி தாமும் உண்டு, உள்ளம் மகிழும் இனிய திருநாள் ரம்ஜான் திருநாள், முப்பது நாட்கள் பகலில் பருகாமலும் உணவு உட்கொள்ளமலும் நோன்பு இருந்து, தீய எண்ணங்கள் அனைத்தையும் அழித்து, இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்றார்.
திமுக தலைவர் கருணாநிதி : அண்ணல் நபிகள் நாயகம் வழங்கிய போதனையின் படி இஸ்லாம் சமுதாய மக்கள் ஒரு மாத காலம், பகல் பொழுது முழுவதும் நீர் கூட அருந்தாமல் கடுமையாக நோன்பிருந்து இரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் கொண்டாடுகின்றனர். இஸ்லாம் சமுதாயத்திற்கு மட்டுமின்றி மனித சமுதாயம் அனைத்திற்கும் பொருந்தும் வாழ்க்கை நெறியை அண்ணல் நபிகள் போதித்துள்ளார் என்று அவர் கூறினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் : இசுலாமியர்களுக்கு ரமலான் மாதம் மிகவும் புனிதமானது. இந்த மாதத்தில் தான் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பினை மேற்கொள்கின்றனர். பசிப்பிணியின் தன்மை பற்றி அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்நோன்பு அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
|
|||||
by Swathi on 20 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|