தமிழக அமைச்சரவை ஒன்பதாவது முறையாக மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி அமைச்சர்கள் எஸ்.டி.செல்லப்பாண்டியன் மற்றும் முகம்மது ஜான் ஆகியோரை நீக்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு பதிலாக புதிய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக எஸ்.அப்துல் ரஹீமும், சுற்றுலாத்துறை அமைச்சராக எஸ்.பி., சண்முகநாதனும் அமைச்சர்களாக நாளை மாலை 4.45 மணிக்கு பொறுப்பேற்க உள்ளனர். மேலும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக செந்தூர் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சராக கே.டி.பச்சமால் நியமிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
|