|
|||||
திருநங்கையர்களுக்கு ரூ.1,000 மாத ஓய்வூதியம்-ஜெயலலிதா |
|||||
சென்னை, ஆக. 1: தமிழகத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஏழ்மை நிலையிலுள்ள திருநங்கையர்களுக்கு மாத ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.1.17 கோடியை ஒதுக்கீடு செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், அங்கன்வாடி மையங்களில் கல்வி பயிலும்
குழந்தைகளுக்கு இரண்டு ஜோடி வண்ண உடைகள் அளிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இந்த அங்கன்வாடி மையங்களில் முதல் கட்டமாக 16
ஆயிரத்து 645 மையங்களில் உள்ள சமையலறைகளில் மாசற்ற சூழலுடன் கூடிய புகையில்லா சமையலறை அமைக்க முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, எரிவாயு அடுப்பு, இணைப்பு மற்றும் பிரஷர் குக்கர் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டு 16 ஆயிரத்து 645 அங்கன்வாடி
மையங்களில் புகையில்லாத சமையலறை அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் இரண்டாவது கட்டமாக 5 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் உள்ள
சமையலறைகளை நவீனமயமாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக, சென்னை, வேலூர், திருச்சி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5
மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து ஆயிரத்து 32 குழந்தைகள் பயன் அடைவர். இந்தத் திட்டத்துக்காக ரூ.4.30 கோடி செலவாகும் என தமிழக அரசின்
அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆக. 1:
தமிழகத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஏழ்மை நிலையிலுள்ள திருநங்கையர்களுக்கு மாத ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.1.17 கோடியை ஒதுக்கீடு செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். அங்கன்வாடி மையங்களில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு இரண்டு ஜோடி வண்ண உடைகள் அளிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இந்த அங்கன்வாடி மையங்களில் முதல் கட்டமாக 16 ஆயிரத்து 645 மையங்களில் சமையலறைகளில் புகையில்லா சமையலறை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, எரிவாயு அடுப்பு, இணைப்பு மற்றும் பிரஷர் குக்கர் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டு 16 ஆயிரத்து 645 அங்கன்வாடி மையங்களில் புகையில்லாத சமையலறை அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் இரண்டாவது கட்டமாக 5 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் சமையலறைகளை நவீனமயமாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக, சென்னை, வேலூர், திருச்சி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து ஆயிரத்து 32 குழந்தைகள் பயன் அடைவர். இந்தத் திட்டத்துக்காக ரூ.4.30 கோடி செலவாகும் என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 02 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|