|
|||||
வட கிழக்கு மாநிலத்தவர்கள் சென்னையிலிருந்தும் ஒட்டுமொத்தமாக வெளியேறினர் |
|||||
தாக்குதல் வதந்தியை அடுத்து பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து மட்டுமில்லாமல் சென்னையிலிருந்தும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேறி வருகின்றனர்.
அசாமில் வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்களுக்கும், பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் மூண்டது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது, ஆகஸ்ட் 20-ம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று முன்தினம் பரவியது. இதையடுத்து சென்னையிலிருந்தும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் மொத்தமாக வெளியேறி வருகின்றனர். வதந்திகள் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், எஸ்.எம்.எஸ் மூலமாகவும் பரவியுள்ளது. இதனால் இந்தியாவில் குரூப் எஸ்.எம்.எஸ் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னை, தாக்குதல் வதந்தியை அடுத்து பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து மட்டுமில்லாமல் சென்னையிலிருந்தும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேறி வருகின்றனர். அசாமில் வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்களுக்கும், பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் மூண்டது.இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது, ஆகஸ்ட் 20-ம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று முன்தினம் பரவியது. இதையடுத்து சென்னையிலிருந்தும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் மொத்தமாக வெளியேறி வருகின்றனர். வதந்திகள் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், எஸ்.எம்.எஸ் மூலமாகவும் பரவியுள்ளது. இதனால் இந்தியாவில் குரூப் எஸ்.எம்.எஸ் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
|
|||||
by Swathi on 18 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|