|
|||||
நெய்காரப்பட்டி கலவரத்திற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம்-மக்கள் கண்காணிப்பகம் |
|||||
சேலம், ஜூலை 27: சேலம் மாவட்டம், நெய்காரப்பட்டியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற கலவரத்துக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று மக்கள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
அந்த அமைப்பின் இயக்குநர் வழக்குரைஞர் சி.சே.ராஜன், ஒருங்கிணைப்பாளர் பழனியம்மாள், மண்டல சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் அசோகன், மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா ஆகியோர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது,
ஜூலை 19-ம் தேதி கலவரம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவில் சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
பாரம்பரியமாக நடந்து வரும் நெய்காரப்பட்டி மூங்கில் குத்து முனியப்பன் கோயில் திருவிழாவில் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு, கண்டுகொள்ளாத தன்மை, அத்துமீறல்கள் ஆகியவற்றை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மக்களிடம் உரிய முறையில் எடுத்துக் கூறாத கிராம நிர்வாக அதிகாரி மீதும், அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை உத்தரவை எழுத்துப்பூர்வமாக வழங்கியிருந்தால், அவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்க முடியும். மேலும், புலனாய்வுத் துறை சரிவர செயல்பட்டிருந்தால் எருதுகள் நெய்காரப்பட்டிக்கு கொண்டு வரப்படுவதை முன்கூட்டியே தடை செய்திருக்க முடியும்.
கைது செய்யப்பட்டவர்களில் பலர், கலவரத்துடன் தொடர்பில்லாதவர்கள். எனவே, அவர்களை விடுவிப்பதுடன் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காவல் துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெத்தனப் போக்குடன் நடந்து கொண்ட மாவட்ட நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்துவதுடன் சேலத்துக்கு புதிய ஆட்சியரையும், காவல் கண்காணிப்பாளரையும் நியமிக்க வேண்டும். மேலும், நெய்காரப்பட்டி மக்களின் அச்சத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் கண்காணிப்பகத்தின் முதல்கட்ட கள ஆய்வு அறிக்கை அரசுக்கும் மனித உரிமைகள் ஆணையத்துக்கும் அனுப்பப்பட உள்ளது. மேலும், மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தி, அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றனர் அவர்கள்.
சேலம், ஜூலை 27: சேலம் மாவட்டம், நெய்காரப்பட்டியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற கலவரத்துக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று மக்கள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. அந்த அமைப்பின் இயக்குநர் வழக்குரைஞர் சி.சே.ராஜன், ஒருங்கிணைப்பாளர் பழனியம்மாள், மண்டல சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் அசோகன், மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா ஆகியோர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது, ஜூலை 19-ம் தேதி கலவரம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவில் சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். பாரம்பரியமாக நடந்து வரும் நெய்காரப்பட்டி மூங்கில் குத்து முனியப்பன் கோயில் திருவிழாவில் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு, கண்டுகொள்ளாத தன்மை, அத்துமீறல்கள் ஆகியவற்றை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மக்களிடம் உரிய முறையில் எடுத்துக் கூறாத கிராம நிர்வாக அதிகாரி மீதும், அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை உத்தரவை எழுத்துப்பூர்வமாக வழங்கியிருந்தால், அவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்க முடியும். மேலும், புலனாய்வுத் துறை சரிவர செயல்பட்டிருந்தால் எருதுகள் நெய்காரப்பட்டிக்கு கொண்டு வரப்படுவதை முன்கூட்டியே தடை செய்திருக்க முடியும். கைது செய்யப்பட்டவர்களில் பலர், கலவரத்துடன் தொடர்பில்லாதவர்கள். எனவே, அவர்களை விடுவிப்பதுடன் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காவல் துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மெத்தனப் போக்குடன் நடந்து கொண்ட மாவட்ட நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்துவதுடன் சேலத்துக்கு புதிய ஆட்சியரையும், காவல் கண்காணிப்பாளரையும் நியமிக்க வேண்டும். மேலும், நெய்காரப்பட்டி மக்களின் அச்சத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் கண்காணிப்பகத்தின் முதல்கட்ட கள ஆய்வு அறிக்கை அரசுக்கும் மனித உரிமைகள் ஆணையத்துக்கும் அனுப்பப்பட உள்ளது. மேலும், மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தி, அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றனர் அவர்கள்.
|
|||||
by Swathi on 27 Jul 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|