LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நெய்காரப்பட்டி கலவரத்திற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம்-மக்கள் கண்காணிப்பகம்

 

சேலம், ஜூலை 27: சேலம் மாவட்டம், நெய்காரப்பட்டியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற கலவரத்துக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று மக்கள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
அந்த அமைப்பின் இயக்குநர் வழக்குரைஞர் சி.சே.ராஜன், ஒருங்கிணைப்பாளர் பழனியம்மாள், மண்டல சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் அசோகன், மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா ஆகியோர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது, 
  ஜூலை 19-ம் தேதி கலவரம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவில் சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
 பாரம்பரியமாக நடந்து வரும் நெய்காரப்பட்டி மூங்கில் குத்து முனியப்பன் கோயில் திருவிழாவில் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு, கண்டுகொள்ளாத தன்மை, அத்துமீறல்கள் ஆகியவற்றை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
 உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மக்களிடம் உரிய முறையில் எடுத்துக் கூறாத கிராம நிர்வாக அதிகாரி மீதும், அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை உத்தரவை எழுத்துப்பூர்வமாக வழங்கியிருந்தால், அவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்க முடியும். மேலும், புலனாய்வுத் துறை சரிவர செயல்பட்டிருந்தால் எருதுகள் நெய்காரப்பட்டிக்கு கொண்டு வரப்படுவதை முன்கூட்டியே தடை செய்திருக்க முடியும்.
  கைது செய்யப்பட்டவர்களில் பலர், கலவரத்துடன் தொடர்பில்லாதவர்கள். எனவே, அவர்களை விடுவிப்பதுடன் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காவல் துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மெத்தனப் போக்குடன் நடந்து கொண்ட மாவட்ட நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்துவதுடன் சேலத்துக்கு புதிய ஆட்சியரையும், காவல் கண்காணிப்பாளரையும் நியமிக்க வேண்டும். மேலும், நெய்காரப்பட்டி மக்களின் அச்சத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மக்கள் கண்காணிப்பகத்தின் முதல்கட்ட கள ஆய்வு அறிக்கை அரசுக்கும் மனித உரிமைகள் ஆணையத்துக்கும் அனுப்பப்பட உள்ளது. மேலும், மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தி, அவர்களுக்கு நீதி வழங்க  வேண்டும் என்றனர் அவர்கள்.

சேலம், ஜூலை 27:

சேலம் மாவட்டம், நெய்காரப்பட்டியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற கலவரத்துக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று மக்கள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. அந்த அமைப்பின் இயக்குநர் வழக்குரைஞர் சி.சே.ராஜன், ஒருங்கிணைப்பாளர் பழனியம்மாள், மண்டல சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் அசோகன், மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா ஆகியோர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது, ஜூலை 19-ம் தேதி கலவரம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் ஆய்வு நடத்தியது.

ஆய்வின் முடிவில் சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். பாரம்பரியமாக நடந்து வரும் நெய்காரப்பட்டி மூங்கில் குத்து முனியப்பன் கோயில் திருவிழாவில் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு, கண்டுகொள்ளாத தன்மை, அத்துமீறல்கள் ஆகியவற்றை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மக்களிடம் உரிய முறையில் எடுத்துக் கூறாத கிராம நிர்வாக அதிகாரி மீதும், அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடை உத்தரவை எழுத்துப்பூர்வமாக வழங்கியிருந்தால், அவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்க முடியும். மேலும், புலனாய்வுத் துறை சரிவர செயல்பட்டிருந்தால் எருதுகள் நெய்காரப்பட்டிக்கு கொண்டு வரப்படுவதை முன்கூட்டியே தடை செய்திருக்க முடியும்.  கைது செய்யப்பட்டவர்களில் பலர், கலவரத்துடன் தொடர்பில்லாதவர்கள். எனவே, அவர்களை விடுவிப்பதுடன் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காவல் துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மெத்தனப் போக்குடன் நடந்து கொண்ட மாவட்ட நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்துவதுடன் சேலத்துக்கு புதிய ஆட்சியரையும், காவல் கண்காணிப்பாளரையும் நியமிக்க வேண்டும். மேலும், நெய்காரப்பட்டி மக்களின் அச்சத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் கண்காணிப்பகத்தின் முதல்கட்ட கள ஆய்வு அறிக்கை அரசுக்கும் மனித உரிமைகள் ஆணையத்துக்கும் அனுப்பப்பட உள்ளது. மேலும், மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தி, அவர்களுக்கு நீதி வழங்க  வேண்டும் என்றனர் அவர்கள்.

 

by Swathi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.