|
|||||
காவல்துறையினருக்குப் பதவி உயர்வு வழங்குவதில் தாமதம்: இடமாற்றம் சிக்கலைத் தீர்க்குமா? |
|||||
காவல்துறையினருக்குப் பதவி உயர்வு வழங்குவதில் தாமதம்: இடமாற்றம் சிக்கலைத் தீர்க்குமா?
ஒவ்வொரு ஆண்டும் தமிழகக் காவல் துறையில் உயர் மட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம். ஆனால், கீழ்மட்ட அதிகாரிகளைப் பொறுத்தவரையில் பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கைகள் மிகவும் காலந்தாழ்த்தப்பட்டு வருவதாக காவல்துறையில் அதிருப்தி நிலவுகிறது.
குறிப்பாக காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவிகளில் உள்ளவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்குவது தாமதப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவிகள் நூற்றியிரண்டு (102) உள்ளன. அதில் எண்பத்தியேழு (87) பதவிகள் காலியாக உள்ளன.
மாவட்டந்தோறும் உள்ள குற்றப்பிரிவு மற்றும் மதுவிலக்குப் பிரிவுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது எட்டு (8) மாவட்டங்களில் மட்டுமே கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளனர். மீதமுள்ள மாவட்டங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. பொதுவாக காவல் கண்காணிப்பாளர்கள் விடுமுறையில் செல்லும் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்தான் மாவட்டங்களின் பொறுப்புகளை கவனிப்பார்கள். ஆனால் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதால் தற்போது பக்கத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் இந்தப் பணிகளையும் சேர்த்துக் கூடுதலாகப் பார்க்கும் நிலையில் உள்ளனர்.
காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக உள்ளவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளாக இப்பதவி உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது 1979ஆம் ஆண்டு காவல் ஆய்வாளர்களாக பணியில் சேர்ந்தவர்களில் 102 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் டிஜிபி அலுவலகத்தில் இருந்து உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வீரப்பனைப் பிடிப்பதற்கான அதிரடிப்படையில் பணியாற்றிய சில அதிகாரிகள் தங்களையும் பதவி உயர்வுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோளை வைத்தனர். ஆனால் அவர்களுக்கு ஒரு பதவி உயர்வு மட்டும்தான் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என 1987ம் ஆண்டு காவல் ஆய்வாளர்களாகப் பணியில் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதால், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவிகளை நிரப்பக் கூடாது என்று வீரப்பனைப் பிடிப்பதற்கான அதிரடிப்படையில் உள்ள சில காவல் அதிகாரிகள் உள்துறைச் செயலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இதனால் உள்துறை அதிகாரிகள் பதவி உயர்வுப் பட்டியலின்படி பணி நிரப்புதல் செய்யாமல் வைத்து விட்டனர். ஆனால் வீரப்பனைப் பிடிப்பதற்கான பிரிவில் பணி செய்த அதிரடிப்படையினரில் 102 பேர்கள் மட்டுமே பட்டியலில் அடுத்தபடியாக உள்ளனர். இதனால் 1979ம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக இருப்பவர்கள் தங்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பாக தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆலோசனைக் கூட்டத்தினை நடத்தியுள்ளார். அதில், பதவி உயர்வு குறித்தும் ஆலோசனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால்தான் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், நீதிமன்ற வழக்கிற்கும் இந்தப் பதவி உயர்வுக்கும் எந்தவிதமான சம்பந்தம் இல்லை. எனவே, முதல்வர் உத்தரவிட்டால் பதவி உயர்வு வழங்கலாம் என்று டிஜிபி ராமானுஜம் கூறியிருக்கிறார்.
இப்பிரச்சினையால், பதவி உயர்வு குறித்து வேறு ஒருநாளில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதன் பிறகு முடிவு எடுக்கலாம் என முதல்வர் ஜெயலலிதா கூறியதாக கூறப்படுகிறது. 1979ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து, தற்போது காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக உள்ள எழுபது பேர் இந்த ஆண்டோடு பணி ஓய்வு பெறுகின்றனர். அதிலும் குறிப்பாக நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள், வரும் மே மாதம் ஓய்வு பெறுகின்றனர். இதனால், பதவி உயர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் என்று அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.
இதனால், அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து வரும் 3ம் தேதி சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆலோசனை நடத்த வரும்படி, பதவி உயர்வுப் பட்டியலில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது உளவுத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்ததால், இது குறித்து ரகசிய விசாரணை செய்தனர்.
பதவி உயர்வுப் பட்டியலில் உள்ள ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளர் இது பற்றிக் கூறும்பொழுது, “நாங்கள் 1979ம் ஆண்டு காவல் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தோம். பதின்நான்கு ஆண்டுகள் காவல் துணை ஆய்வாளராகவும், பதின்மூன்று ஆண்டுகள் காவல் ஆய்வாளர்களாகவும், எட்டு ஆண்டுகள் காவல் துணைக் கண்காணிப்பாளர்களாகவும் பணி செய்து வருகிறோம். இதுவரை இரண்டு பேருக்கு மட்டுமே பதவி உயர்வு கிடைத்துள்ளது. ஆனால் 1979ம் ஆண்டு காவல் இணைக் கண்காணிப்பாளர்களாக பணியில் சேர்ந்த பல ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபிக்களாக பதவிஉயர்வு பெற்றுள்ளனர். அதில் சிலர் டிஜிபி பதவியை நிறைவு செய்து பணி ஓய்வும் பெற்று விட்டார்கள். இவர்களுக்கு மட்டும் ஐந்துமுறை பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான், நாங்கள் வருகிற 3ஆம் தேதி சென்னையில் கூடி முடிவு எடுக்க உள்ளோம். முதல்வருக்கும் எங்களது குறைகளை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். குறிப்பாக மொத்தமாக விடுமுறை எடுக்கலாமா என்றும் ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இன்று (01.03.2013) காவல் துறையில் உருவாகியுள்ள அதிருப்தி மற்றும் புகார்களின் எதிரொலியாக, காவல் துணைக் கண்காணிப்பாளர்களில், நாற்பது(40) பேரை, டி.ஜி.பி., ராமானுஜம் ஒரே நாளில் அதிரடியாக இடமாற்றம் செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவல்துறையில் இதுபோன்று நடக்கக்கூடியதுதான் என்றாலும் ஒரே நேரத்தில் 40 பேரை இடமாற்றம் செய்வது சரியானதல்ல என்றும் இது காவல்துறையில் மேலும் குழப்பத்தையும் கசப்பையுமே உருவாக்கும் எனவும் சில வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
காவல்துறையினருக்குப் பதவி உயர்வு வழங்குவதில் தாமதம்: இடமாற்றம் சிக்கலைத் தீர்க்குமா?
ஒவ்வொரு ஆண்டும் தமிழகக் காவல் துறையில் உயர் மட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம். ஆனால், கீழ்மட்ட அதிகாரிகளைப் பொறுத்தவரையில் பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கைகள் மிகவும் காலந்தாழ்த்தப்பட்டு வருவதாக காவல்துறையில் அதிருப்தி நிலவுகிறது.
குறிப்பாக காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவிகளில் உள்ளவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்குவது தாமதப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவிகள் நூற்றியிரண்டு (102) உள்ளன. அதில் எண்பத்தியேழு (87) பதவிகள் காலியாக உள்ளன.
மாவட்டந்தோறும் உள்ள குற்றப்பிரிவு மற்றும் மதுவிலக்குப் பிரிவுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது எட்டு (8) மாவட்டங்களில் மட்டுமே கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளனர். மீதமுள்ள மாவட்டங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. பொதுவாக காவல் கண்காணிப்பாளர்கள் விடுமுறையில் செல்லும் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்தான் மாவட்டங்களின் பொறுப்புகளை கவனிப்பார்கள். ஆனால் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதால் தற்போது பக்கத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் இந்தப் பணிகளையும் சேர்த்துக் கூடுதலாகப் பார்க்கும் நிலையில் உள்ளனர்.
காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக உள்ளவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளாக இப்பதவி உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது 1979ஆம் ஆண்டு காவல் ஆய்வாளர்களாக பணியில் சேர்ந்தவர்களில் 102 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் டிஜிபி அலுவலகத்தில் இருந்து உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வீரப்பனைப் பிடிப்பதற்கான அதிரடிப்படையில் பணியாற்றிய சில அதிகாரிகள் தங்களையும் பதவி உயர்வுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோளை வைத்தனர். ஆனால் அவர்களுக்கு ஒரு பதவி உயர்வு மட்டும்தான் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என 1987ம் ஆண்டு காவல் ஆய்வாளர்களாகப் பணியில் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதால், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவிகளை நிரப்பக் கூடாது என்று வீரப்பனைப் பிடிப்பதற்கான அதிரடிப்படையில் உள்ள சில காவல் அதிகாரிகள் உள்துறைச் செயலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இதனால் உள்துறை அதிகாரிகள் பதவி உயர்வுப் பட்டியலின்படி பணி நிரப்புதல் செய்யாமல் வைத்து விட்டனர். ஆனால் வீரப்பனைப் பிடிப்பதற்கான பிரிவில் பணி செய்த அதிரடிப்படையினரில் 102 பேர்கள் மட்டுமே பட்டியலில் அடுத்தபடியாக உள்ளனர். இதனால் 1979ம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக இருப்பவர்கள் தங்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பாக தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆலோசனைக் கூட்டத்தினை நடத்தியுள்ளார். அதில், பதவி உயர்வு குறித்தும் ஆலோசனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால்தான் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், நீதிமன்ற வழக்கிற்கும் இந்தப் பதவி உயர்வுக்கும் எந்தவிதமான சம்பந்தம் இல்லை. எனவே, முதல்வர் உத்தரவிட்டால் பதவி உயர்வு வழங்கலாம் என்று டிஜிபி ராமானுஜம் கூறியிருக்கிறார்.
இப்பிரச்சினையால், பதவி உயர்வு குறித்து வேறு ஒருநாளில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதன் பிறகு முடிவு எடுக்கலாம் என முதல்வர் ஜெயலலிதா கூறியதாக கூறப்படுகிறது. 1979ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து, தற்போது காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக உள்ள எழுபது பேர் இந்த ஆண்டோடு பணி ஓய்வு பெறுகின்றனர். அதிலும் குறிப்பாக நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள், வரும் மே மாதம் ஓய்வு பெறுகின்றனர். இதனால், பதவி உயர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் என்று அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.
இதனால், அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து வரும் 3ம் தேதி சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆலோசனை நடத்த வரும்படி, பதவி உயர்வுப் பட்டியலில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது உளவுத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்ததால், இது குறித்து ரகசிய விசாரணை செய்தனர்.
பதவி உயர்வுப் பட்டியலில் உள்ள ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளர் இது பற்றிக் கூறும்பொழுது, “நாங்கள் 1979ம் ஆண்டு காவல் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தோம். பதின்நான்கு ஆண்டுகள் காவல் துணை ஆய்வாளராகவும், பதின்மூன்று ஆண்டுகள் காவல் ஆய்வாளர்களாகவும், எட்டு ஆண்டுகள் காவல் துணைக் கண்காணிப்பாளர்களாகவும் பணி செய்து வருகிறோம். இதுவரை இரண்டு பேருக்கு மட்டுமே பதவி உயர்வு கிடைத்துள்ளது. ஆனால் 1979ம் ஆண்டு காவல் இணைக் கண்காணிப்பாளர்களாக பணியில் சேர்ந்த பல ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபிக்களாக பதவிஉயர்வு பெற்றுள்ளனர். அதில் சிலர் டிஜிபி பதவியை நிறைவு செய்து பணி ஓய்வும் பெற்று விட்டார்கள். இவர்களுக்கு மட்டும் ஐந்துமுறை பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான், நாங்கள் வருகிற 3ஆம் தேதி சென்னையில் கூடி முடிவு எடுக்க உள்ளோம். முதல்வருக்கும் எங்களது குறைகளை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். குறிப்பாக மொத்தமாக விடுமுறை எடுக்கலாமா என்றும் ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இன்று (01.03.2013) காவல் துறையில் உருவாகியுள்ள அதிருப்தி மற்றும் புகார்களின் எதிரொலியாக, காவல் துணைக் கண்காணிப்பாளர்களில், நாற்பது(40) பேரை, டி.ஜி.பி., ராமானுஜம் ஒரே நாளில் அதிரடியாக இடமாற்றம் செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவல்துறையில் இதுபோன்று நடக்கக்கூடியதுதான் என்றாலும் ஒரே நேரத்தில் 40 பேரை இடமாற்றம் செய்வது சரியானதல்ல என்றும் இது காவல்துறையில் மேலும் குழப்பத்தையும் கசப்பையுமே உருவாக்கும் எனவும் சில வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
|
|||||
by MAYIL on 02 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|