தமிழகத்தை சேர்ந்த டெல்லி மேல்–சபை எம்.பி.க்கள் ஆறு பேரின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து அந்த காலியிடங்களுக்கு வரும் 27–ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. வேட்பாளர்கள் டாக்டர் வா.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், த.ரத்தினவேல், இரா.லட்சுமணன், கு.தங்கமுத்து ஆகிய ஐந்து பேரும், தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் டி.ராஜா, தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.ஆர்.இளங்கோவன், சுயேச்சை வேட்பாளர்கள் கு.சொ.கோவணம தங்கவேல், தேர்தல் மன்னன் பத்மராஜன், எஸ்.பாலு, த.ந.வேல்முருகன் சோழகனார், பி.என்.ஸ்ரீராமச்சந்திரன் ஆகிய 13 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்பு மனுக்களை பரிசீலித்த தேர்தல் அதிகாரிகள் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களின் 8 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும். 5 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
|