சென்னை அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை சரியாக பாதுகாக்காததால் எலி கடித்த சம்பவம் தொடர்பாக 2 டாக்டர்கள் உள்பட 9 மருத்துவப் பணியாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்த தமிழக முதல்வர் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார், இதன் பேரில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் அரசுச் செயலாளர் மருத்துவமனைக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பின்மை அப்பட்டமானதை அடுத்து 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
|