LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

எஸ் ஐ குத்திக் கொலை-தலைமறைவானார் தலைமைக் காவலர்

 

சுரண்டை, ஜூலை 26: திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையில் வியாழக்கிழமை காவல் உதவி ஆய்வாளர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தலைமைக் காவலரை போலீசார்  தேடி வருகின்றனர்.
 தென்காசி அருகேயுள்ள இலஞ்சியைச் சேர்ந்தவர் தி.இசக்கி (57). சுரண்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.
 இவர்  வியாழக்கிழமை மாலையில் பணிக்குச் செல்வதற்காக இசக்கி தனது வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தாராம்.
 அப்போது அதே காவல்நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து, கடந்த வாரம் சுத்தமல்லி காவல் நிலையத்துக்கு மாற்றலாகிச் சென்ற தலைமைக் காவலர் சண்முகராஜ் (50) அங்கு சென்றுள்ளார். அவர், தனது பணியிட மாறுதலுக்கு இசக்கிதான் காரணம் எனக் கூறி தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில், சண்முகராஜ் தான் வைத்திருந்த கத்தியால் இசக்கியை குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.அப்பொழுது  இசக்கியின் அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரை தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், வழியிலேயே இசக்கி இறந்தார்.கொலையுண்ட உதவி ஆய்வாளர் இசக்கிக்கு கல்யாணி என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
 இதுகுறித்து சுரண்டை காவல் நிலைய ஆய்வாளர் சங்கர்தேவ் வழக்குப் பதிவு செய்து, தலைமைக் காவலர் சண்முகராஜை தேடி வருகிறார். 
 

சுரண்டை, ஜூலை 26:

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையில் வியாழக்கிழமை காவல் உதவி ஆய்வாளர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தலைமைக் காவலரை போலீசார்  தேடி வருகின்றனர். தென்காசி அருகேயுள்ள இலஞ்சியைச் சேர்ந்தவர் தி.இசக்கி (57). சுரண்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவர்  வியாழக்கிழமை மாலையில் பணிக்குச் செல்வதற்காக இசக்கி தனது வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தாராம். 

அப்போது அதே காவல்நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து, கடந்த வாரம் சுத்தமல்லி காவல் நிலையத்துக்கு மாற்றலாகிச் சென்ற தலைமைக் காவலர் சண்முகராஜ் (50) அங்கு சென்றுள்ளார். அவர், தனது பணியிட மாறுதலுக்கு இசக்கிதான் காரணம் எனக் கூறி தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில், சண்முகராஜ் தான் வைத்திருந்த கத்தியால் இசக்கியை குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டாராம். அப்பொழுது  இசக்கியின் அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரை தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், வழியிலேயே இசக்கி இறந்தார். கொலையுண்ட உதவி ஆய்வாளர் இசக்கிக்கு கல்யாணி என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதுகுறித்து சுரண்டை காவல் நிலைய ஆய்வாளர் சங்கர்தேவ் வழக்குப் பதிவு செய்து, தலைமைக் காவலர் சண்முகராஜை தேடி வருகிறார்.  

 

by Swathi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.