|
|||||
எஸ் ஐ குத்திக் கொலை-தலைமறைவானார் தலைமைக் காவலர் |
|||||
சுரண்டை, ஜூலை 26: திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையில் வியாழக்கிழமை காவல் உதவி ஆய்வாளர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தலைமைக் காவலரை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி அருகேயுள்ள இலஞ்சியைச் சேர்ந்தவர் தி.இசக்கி (57). சுரண்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.
இவர் வியாழக்கிழமை மாலையில் பணிக்குச் செல்வதற்காக இசக்கி தனது வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தாராம்.
அப்போது அதே காவல்நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து, கடந்த வாரம் சுத்தமல்லி காவல் நிலையத்துக்கு மாற்றலாகிச் சென்ற தலைமைக் காவலர் சண்முகராஜ் (50) அங்கு சென்றுள்ளார். அவர், தனது பணியிட மாறுதலுக்கு இசக்கிதான் காரணம் எனக் கூறி தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில், சண்முகராஜ் தான் வைத்திருந்த கத்தியால் இசக்கியை குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.அப்பொழுது இசக்கியின் அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரை தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், வழியிலேயே இசக்கி இறந்தார்.கொலையுண்ட உதவி ஆய்வாளர் இசக்கிக்கு கல்யாணி என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இதுகுறித்து சுரண்டை காவல் நிலைய ஆய்வாளர் சங்கர்தேவ் வழக்குப் பதிவு செய்து, தலைமைக் காவலர் சண்முகராஜை தேடி வருகிறார்.
சுரண்டை, ஜூலை 26: திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையில் வியாழக்கிழமை காவல் உதவி ஆய்வாளர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தலைமைக் காவலரை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசி அருகேயுள்ள இலஞ்சியைச் சேர்ந்தவர் தி.இசக்கி (57). சுரண்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவர் வியாழக்கிழமை மாலையில் பணிக்குச் செல்வதற்காக இசக்கி தனது வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தாராம். அப்போது அதே காவல்நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து, கடந்த வாரம் சுத்தமல்லி காவல் நிலையத்துக்கு மாற்றலாகிச் சென்ற தலைமைக் காவலர் சண்முகராஜ் (50) அங்கு சென்றுள்ளார். அவர், தனது பணியிட மாறுதலுக்கு இசக்கிதான் காரணம் எனக் கூறி தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில், சண்முகராஜ் தான் வைத்திருந்த கத்தியால் இசக்கியை குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டாராம். அப்பொழுது இசக்கியின் அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரை தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், வழியிலேயே இசக்கி இறந்தார். கொலையுண்ட உதவி ஆய்வாளர் இசக்கிக்கு கல்யாணி என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதுகுறித்து சுரண்டை காவல் நிலைய ஆய்வாளர் சங்கர்தேவ் வழக்குப் பதிவு செய்து, தலைமைக் காவலர் சண்முகராஜை தேடி வருகிறார்.
|
|||||
by Swathi on 27 Jul 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|