|
|||||
பள்ளி வாகனங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக புதிய வரைமுறைகள் தேவை - உயர் நீதிமன்றம் |
|||||
சென்னை, ஜூலை 27 : பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்த சிறுமி சுருதி மரணம் கொலைக்கு சமமானது, அதனை ஏன் கொலை வழக்காகப் பதிவு செய்யக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பேருந்தை ஆய்வு செய்யாமல் அதற்கு அனுமதி அளித்த போக்குவரத்துத் துறை ஆய்வாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தையை இழந்த பெற்றோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்புடைய பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியை மூட ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
வழக்கறிஞரின் விளக்கத்தைக் கேட்ட நீதிபதி, இந்த நடவடிக்கைகள் சரிதான். ஆனால் இவை மட்டுமே போதாது என்று குறிப்பிட்டார்.
குழந்தையை இழந்த பெற்றோருக்கு சியோன் பள்ளி சார்பில் ரூ.50 ஆயிரத்தை தற்காலிக இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கை போதாது. தவறிழைத்த அதிகாரிகள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறினார்.
பள்ளி வாகனங்கள் குறித்து புதிய விதிமுறைகளை தமிழக அரசு 2 வாரத்தில் உருவாக்க வேண்டும். அதில் தவறு செய்யும் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய விதிமுறையில் வழிமுறைகள் இருக்க வேண்டும். புதிய விதிமுறைகளை தமிழக அரசு உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, ஜூலை 27 : பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்த சிறுமி சுருதி மரணம் கொலைக்கு சமமானது, அதனை ஏன் கொலை வழக்காகப் பதிவு செய்யக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பேருந்தை ஆய்வு செய்யாமல் அதற்கு அனுமதி அளித்த போக்குவரத்துத் துறை ஆய்வாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தையை இழந்த பெற்றோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்புடைய பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியை மூட ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். வழக்கறிஞரின் விளக்கத்தைக் கேட்ட நீதிபதி, இந்த நடவடிக்கைகள் சரிதான். ஆனால் இவை மட்டுமே போதாது என்று குறிப்பிட்டார். குழந்தையை இழந்த பெற்றோருக்கு சியோன் பள்ளி சார்பில் ரூ.50 ஆயிரத்தை தற்காலிக இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கை போதாது. தவறிழைத்த அதிகாரிகள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறினார். பள்ளி வாகனங்கள் குறித்து புதிய விதிமுறைகளை தமிழக அரசு 2 வாரத்தில் உருவாக்க வேண்டும். அதில் தவறு செய்யும் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய விதிமுறையில் வழிமுறைகள் இருக்க வேண்டும். புதிய விதிமுறைகளை தமிழக அரசு உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
|
|||||
by Swathi on 27 Jul 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|