LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பள்ளி வாகனங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக புதிய வரைமுறைகள் தேவை - உயர் நீதிமன்றம்

 

சென்னை, ஜூலை 27 : பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்த சிறுமி சுருதி மரணம் கொலைக்கு சமமானது, அதனை ஏன் கொலை வழக்காகப் பதிவு செய்யக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பேருந்தை ஆய்வு செய்யாமல் அதற்கு அனுமதி அளித்த போக்குவரத்துத் துறை ஆய்வாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தையை இழந்த பெற்றோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்புடைய பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியை மூட ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
 வழக்கறிஞரின் விளக்கத்தைக் கேட்ட நீதிபதி, இந்த நடவடிக்கைகள் சரிதான். ஆனால் இவை மட்டுமே போதாது என்று குறிப்பிட்டார்.
குழந்தையை இழந்த பெற்றோருக்கு சியோன் பள்ளி சார்பில் ரூ.50 ஆயிரத்தை தற்காலிக இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கை போதாது. தவறிழைத்த அதிகாரிகள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறினார்.
பள்ளி வாகனங்கள் குறித்து புதிய விதிமுறைகளை தமிழக அரசு 2 வாரத்தில் உருவாக்க வேண்டும்.   அதில் தவறு செய்யும் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய விதிமுறையில் வழிமுறைகள் இருக்க வேண்டும். புதிய விதிமுறைகளை தமிழக அரசு உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை, ஜூலை 27 :

பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்த சிறுமி சுருதி மரணம் கொலைக்கு சமமானது, அதனை ஏன் கொலை வழக்காகப் பதிவு செய்யக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பேருந்தை ஆய்வு செய்யாமல் அதற்கு அனுமதி அளித்த போக்குவரத்துத் துறை ஆய்வாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தையை இழந்த பெற்றோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்புடைய பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியை மூட ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். வழக்கறிஞரின் விளக்கத்தைக் கேட்ட நீதிபதி, இந்த நடவடிக்கைகள் சரிதான். ஆனால் இவை மட்டுமே போதாது என்று குறிப்பிட்டார்.

குழந்தையை இழந்த பெற்றோருக்கு சியோன் பள்ளி சார்பில் ரூ.50 ஆயிரத்தை தற்காலிக இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கை போதாது. தவறிழைத்த அதிகாரிகள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறினார்.

பள்ளி வாகனங்கள் குறித்து புதிய விதிமுறைகளை தமிழக அரசு 2 வாரத்தில் உருவாக்க வேண்டும். அதில் தவறு செய்யும் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய விதிமுறையில் வழிமுறைகள் இருக்க வேண்டும். புதிய விதிமுறைகளை தமிழக அரசு உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

 

by Swathi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.