கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறைக்குப் பிறகு ஜூன் 3-ஆம் தேதி தமிழக பள்ளிகள் திறப்பதாக இருந்தது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால் கோடை விடுமுறையை தமிழக அரசு மேலும் ஒரு வாரம் நீடித்தது. இந்த நிலையில் விடுமுறை முடிவடைந்து, 2013- 14ம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர்.
|