|
|||||
சீதக்கமங்கலத்தில் 1100 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் |
|||||
திருவாரூர், ஜூலை 31: திருவாரூர் மாவட்டம், சீதக்கமங்கலத்தில் 1100- ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு இருந்த பழைய சோழர் கால சிவாலயம் இடிந்து தரை மட்டமாக இருந்துள்ளது. அந்த ஆலயத்தைப் புதுப்பிக்க மக்கள் நினைத்து, சீர்
படுத்துவதுக்கான முயற்சி எடுத்துள்ளனர். அப்போது முன்று கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.இதுகுறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில்
பாலசுப்ரமணியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் கல்வெட்டுகளை படி எடுத்து ஆய்வு மேற்கொண்டார்.இது கி.பி. 912 ஐக்
குறிப்பிடுவதாகும். அதில் அவ்வூரின் பழம் பெயர் ஸ்ரீதொங்கமங்கலம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.மற்றொரு கல்வெட்டு ராஜராஜனின் 27-ம்
ஆட்சியாண்டில் (கி.பி.1012) பொறிக்கப்பட்டது.அந்த சாசனத்தில் அவ்வூருக்கு இரண்டு பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீதுங்கமங்கலம் என்னும்
அபிமானபூஷண சதிர்வேதிமங்கலம் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இக்கோயிலை மக்கள் சீர்படுத்த நினைத்தது பெருமைக்குரிய செயலாகும்,
என்றார் பாலசுப்ரமணியன்.
திருவாரூர், ஜூலை 31:
திருவாரூர் மாவட்டம், சீதக்கமங்கலத்தில் 1100 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு இருந்த பழைய சோழர் கால சிவாலயம் இடிந்து தரை மட்டமாக இருந்துள்ளது. அந்த ஆலயத்தைப் புதுப்பிக்க மக்கள் நினைத்து, சீர் படுத்துவதுக்கான முயற்சி எடுத்துள்ளனர். அப்போது முன்று கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.இதுகுறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் கல்வெட்டுகளை படி எடுத்து ஆய்வு மேற்கொண்டார்.இது கி.பி. 912 ஐக் குறிப்பிடுவதாகும். அதில் அவ்வூரின் பழம் பெயர் ஸ்ரீதொங்கமங்கலம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டு ராஜராஜனின் 27-ம் ஆட்சியாண்டில் கி.பி.1012 பொறிக்கப்பட்டது. அந்த சாசனத்தில் அவ்வூருக்கு இரண்டு பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீதுங்கமங்கலம் என்னும் அபிமானபூஷண சதிர்வேதிமங்கலம் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இக்கோயிலை மக்கள் சீர்படுத்த நினைத்தது பெருமைக்குரிய செயலாகும், என்றார் பாலசுப்ரமணியன். |
|||||
by Swathi on 01 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|