|
|||||
காலராவை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்-ஸ்டாலின் |
|||||
சென்னை, ஜூலை 27 : மு.க. ஸ்டாலின் தனது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூர் பகுதிக்குச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அங்கு பத்திரிகையாளர்களச் சந்தித்த ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். ஆனால், நிதி ஒதுக்கீடு செய்தும், மாநகராட்சி முறையாக ஆயத்த வேலைகளைக் கூடப் பார்க்கவில்லை என்றார். கொளத்தூர் தொகுதியில் 10, 12 இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை இன்று பார்வையிட்டேன். பொதுமக்கள் என்னிடம் கலர் கலராக கழிவு நீர் குடிநீரில் கலந்திருப்பதை பாட்டில்களில் பிடித்து என்னிடம் காட்டினர்கள். புகார் செய்யுமாறு அறிவிக்கப்பட்ட தொலைபேசி எண்களில் புகார் செய்தால் அதிகாரிகள் தொலைபேசியை எடுப்பதே இல்லை என்றும் மக்கள் தெரிவித்தனர். குடிநீரில் கழிவு நீர் கலப்பது, குப்பைகள் சரியாக அள்ளப்படாமல் இருப்பதால் காலரா பரவிடக் காரணமாக உள்ளது என்றார்.
மேலும், சென்னையில் காலரா இல்லை என்று மேயர் சைதை துரைசாமி கூறுகிறார். ஆனால் தினமும் 4, 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். கடந்த 6 மாதங்களில் மட்டும் 29 பேர் காலராவினாலும், 7 பேர் வயிற்றுப் போக்கினாலும் உயிர்ப்பலி ஆகியுள்ளனர் என ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று ஒரு நாள் மட்டும் 27 பேர் மருத்துமனையில் அனுமதி என தமிழ் நாளிதழ்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினையை தீர்ப்பது என் வேலை அல்ல. எம்.எல்.ஏ.வின் வேலை என்று பொறுப்பின்றி மேயர் பேசியிருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவோ 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைவாசத்தலமான கொடநாட்டில் இருக்கிறார். அவருக்கு ஈ, கொசு, காலரா பற்றி தெரிய வாய்ப்பில்லை. அப்படியே தெரிந்தாலும் ஹெலிகாப்டரில்தான் வந்து பார்வையிடுவார்.காலரா பரவாமல் தடுக்க மாநகராட்சி உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் மக்களை ஒன்றுதிரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
நாங்கள் தவறான பிரச்சாரம் செய்வதாக மேயர் துரைசாமி கூறியதால் இன்று நேரில் வந்து பார்வையிட்டேன். இந்தக் குறைகளைப் போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
சென்னை, ஜூலை 27 : மு.க. ஸ்டாலின் தனது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூர் பகுதிக்குச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அங்கு பத்திரிகையாளர்களச் சந்தித்த ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். ஆனால், நிதி ஒதுக்கீடு செய்தும், மாநகராட்சி முறையாக ஆயத்த வேலைகளைக் கூடப் பார்க்கவில்லை என்றார். கொளத்தூர் தொகுதியில் 10, 12 இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை இன்று பார்வையிட்டேன். பொதுமக்கள் என்னிடம் கலர் கலராக கழிவு நீர் குடிநீரில் கலந்திருப்பதை பாட்டில்களில் பிடித்து என்னிடம் காட்டினர்கள். புகார் செய்யுமாறு அறிவிக்கப்பட்ட தொலைபேசி எண்களில் புகார் செய்தால் அதிகாரிகள் தொலைபேசியை எடுப்பதே இல்லை என்றும் மக்கள் தெரிவித்தனர். குடிநீரில் கழிவு நீர் கலப்பது, குப்பைகள் சரியாக அள்ளப்படாமல் இருப்பதால் காலரா பரவிடக் காரணமாக உள்ளது என்றார். மேலும், சென்னையில் காலரா இல்லை என்று மேயர் சைதை துரைசாமி கூறுகிறார். ஆனால் தினமும் 4, 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். கடந்த 6 மாதங்களில் மட்டும் 29 பேர் காலராவினாலும், 7 பேர் வயிற்றுப் போக்கினாலும் உயிர்ப்பலி ஆகியுள்ளனர் என ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 27 பேர் மருத்துமனையில் அனுமதி என தமிழ் நாளிதழ்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினையை தீர்ப்பது என் வேலை அல்ல. எம்.எல்.ஏ.வின் வேலை என்று பொறுப்பின்றி மேயர் பேசியிருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவோ 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைவாசத்தலமான கொடநாட்டில் இருக்கிறார். அவருக்கு ஈ, கொசு, காலரா பற்றி தெரிய வாய்ப்பில்லை. அப்படியே தெரிந்தாலும் ஹெலிகாப்டரில்தான் வந்து பார்வையிடுவார்.காலரா பரவாமல் தடுக்க மாநகராட்சி உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் மக்களை ஒன்றுதிரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின். நாங்கள் தவறான பிரச்சாரம் செய்வதாக மேயர் துரைசாமி கூறியதால் இன்று நேரில் வந்து பார்வையிட்டேன். இந்தக் குறைகளைப் போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
|
|||||
by Swathi on 27 Jul 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|