LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இலங்கை கடற்படையினர் சித்ரவதை: தமிழகம் திரும்பிய மீனவர்கள் அரசிடம் புகார்

 

     ராமேஸ்வரம் : தங்களை இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக இலங்கையிலிருந்து இன்று காலை ராமேஸ்வரம் திரும்பிய தமிழக மீனவர்கள், கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர்.கடந்த 21ம் தேதி கட்சத் தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச்  சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.
     மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடும் முயற்சிக்குப் பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும், இன்று காலை மண்டபம் பகுதிக்கு வந்தனர்.மண்டபம் காவல் படையினர் அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.23 மீனவர்களுடன் அவர்கள் சென்ற படகுகளும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.அவர்களிடம் காவல்துறையினர் விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர்.பிறகு அவர்கள்  தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
     இதனிடையே தாங்கள் இந்திய கடற்பகுதிக்குள்தான் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், இலங்கை கடற்படையினர்தான் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தங்களது கழுத்தில் கத்தி மற்றும் துப்பாக்கியை வைத்து, "தங்களுடன்  வராவிட்டால் கொன்றுவிடுவோம்”  என மிரட்டி அழைத்துச் சென்றதாகவும், பின்னர்  தங்களை கைகளில் விலங்கிட்டு நாய்களைப் போன்று நடத்தியதாகவும், கழிவறைகளிலேயே தங்க வைத்ததாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் இலங்கை கடற்படையினர், இந்திய படையினரிடம் நேற்று இரவிலேயே ஒப்படைத்துவிட்டபோதிலும், இந்திய படையினரும் அவர்களது பங்கிற்கு தங்களிடம் இரவு  முழுவதும் கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

     ராமேஸ்வரம் : தங்களை இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக இலங்கையிலிருந்து இன்று காலை ராமேஸ்வரம் திரும்பிய தமிழக மீனவர்கள், கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர்.கடந்த 21ம் தேதி கட்சத் தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச்  சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.

     மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடும் முயற்சிக்குப் பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும், இன்று காலை மண்டபம் பகுதிக்கு வந்தனர்.மண்டபம் காவல் படையினர் அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.23 மீனவர்களுடன் அவர்கள் சென்ற படகுகளும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.அவர்களிடம் காவல்துறையினர் விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர்.பிறகு அவர்கள்  தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

     இதனிடையே தாங்கள் இந்திய கடற்பகுதிக்குள்தான் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், இலங்கை கடற்படையினர்தான் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தங்களது கழுத்தில் கத்தி மற்றும் துப்பாக்கியை வைத்து, "தங்களுடன்  வராவிட்டால் கொன்றுவிடுவோம்”  என மிரட்டி அழைத்துச் சென்றதாகவும், பின்னர்  தங்களை கைகளில் விலங்கிட்டு நாய்களைப் போன்று நடத்தியதாகவும், கழிவறைகளிலேயே தங்க வைத்ததாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் இலங்கை கடற்படையினர், இந்திய படையினரிடம் நேற்று இரவிலேயே ஒப்படைத்துவிட்டபோதிலும், இந்திய படையினரும் அவர்களது பங்கிற்கு தங்களிடம் இரவு  முழுவதும் கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

by Swathi   on 28 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.