|
|||||
இலங்கை கடற்படையினர் சித்ரவதை: தமிழகம் திரும்பிய மீனவர்கள் அரசிடம் புகார் |
|||||
ராமேஸ்வரம் : தங்களை இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக இலங்கையிலிருந்து இன்று காலை ராமேஸ்வரம் திரும்பிய தமிழக மீனவர்கள், கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர்.கடந்த 21ம் தேதி கட்சத் தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடும் முயற்சிக்குப் பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும், இன்று காலை மண்டபம் பகுதிக்கு வந்தனர்.மண்டபம் காவல் படையினர் அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.23 மீனவர்களுடன் அவர்கள் சென்ற படகுகளும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.அவர்களிடம் காவல்துறையினர் விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர்.பிறகு அவர்கள் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இதனிடையே தாங்கள் இந்திய கடற்பகுதிக்குள்தான் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், இலங்கை கடற்படையினர்தான் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தங்களது கழுத்தில் கத்தி மற்றும் துப்பாக்கியை வைத்து, "தங்களுடன் வராவிட்டால் கொன்றுவிடுவோம்” என மிரட்டி அழைத்துச் சென்றதாகவும், பின்னர் தங்களை கைகளில் விலங்கிட்டு நாய்களைப் போன்று நடத்தியதாகவும், கழிவறைகளிலேயே தங்க வைத்ததாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் இலங்கை கடற்படையினர், இந்திய படையினரிடம் நேற்று இரவிலேயே ஒப்படைத்துவிட்டபோதிலும், இந்திய படையினரும் அவர்களது பங்கிற்கு தங்களிடம் இரவு முழுவதும் கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டினர்.
ராமேஸ்வரம் : தங்களை இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக இலங்கையிலிருந்து இன்று காலை ராமேஸ்வரம் திரும்பிய தமிழக மீனவர்கள், கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர்.கடந்த 21ம் தேதி கட்சத் தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடும் முயற்சிக்குப் பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும், இன்று காலை மண்டபம் பகுதிக்கு வந்தனர்.மண்டபம் காவல் படையினர் அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.23 மீனவர்களுடன் அவர்கள் சென்ற படகுகளும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.அவர்களிடம் காவல்துறையினர் விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர்.பிறகு அவர்கள் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதனிடையே தாங்கள் இந்திய கடற்பகுதிக்குள்தான் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், இலங்கை கடற்படையினர்தான் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தங்களது கழுத்தில் கத்தி மற்றும் துப்பாக்கியை வைத்து, "தங்களுடன் வராவிட்டால் கொன்றுவிடுவோம்” என மிரட்டி அழைத்துச் சென்றதாகவும், பின்னர் தங்களை கைகளில் விலங்கிட்டு நாய்களைப் போன்று நடத்தியதாகவும், கழிவறைகளிலேயே தங்க வைத்ததாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் இலங்கை கடற்படையினர், இந்திய படையினரிடம் நேற்று இரவிலேயே ஒப்படைத்துவிட்டபோதிலும், இந்திய படையினரும் அவர்களது பங்கிற்கு தங்களிடம் இரவு முழுவதும் கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டினர். |
|||||
by Swathi on 28 Jul 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|