சென்னை, அகஸ்ட் 10 : பள்ளி வாகன விதிமுறைகளை ஒழுங்குபடுத்த உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு மேலும் இரண்டு வார காலம் அவகாசம் அளித்துள்ளது.கடந்த மாதம் சரியான பராமரிப்பு இல்லாத பேருந்தால் ஸ்ருதி என்ற மாணவி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தானாகவே முன் வந்து வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு ஜூலை 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பள்ளி வாகனங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் இரண்டு வார காலத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன், வரைவு விதிமுறைகளை தாக்கல் செய்ய அரசுக்கு மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என்று வேண்டினார். எனவே தமிழக அரசுக்கு மேலும் இரண்டு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது.
சென்னை, அகஸ்ட் 10 : பள்ளி வாகன விதிமுறைகளை ஒழுங்குபடுத்த உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு மேலும் இரண்டு வார காலம் அவகாசம் அளித்துள்ளது.கடந்த மாதம் சரியான பராமரிப்பு இல்லாத பேருந்தால் ஸ்ருதி என்ற மாணவி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தானாகவே முன் வந்து வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு ஜூலை 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பள்ளி வாகனங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் இரண்டு வார காலத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன், வரைவு விதிமுறைகளை தாக்கல் செய்ய அரசுக்கு மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என்று வேண்டினார். எனவே தமிழக அரசுக்கு மேலும் இரண்டு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது.
|